tamilnadu

உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை மு.க. ஸ்டாலின் அறிக்கை

சென்னை,டிச.8 உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடு வதை தவிர வேறு வழி யில்லை என தி.மு.க. தலை வர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணிக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையம், தேர்தல் அறிவிப்பை வெளி யிட்டுள்ளது. அ.தி.மு.க. அரசின் கைப்பிள்ளையாக மாநில தேர்தல் ஆணையம் மாறியுள்ளது ஜனநாய கத்திற்கு வெட்கக் கேடாக உள்ளது. புதிய உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறி விக்கும் முன் அனைத்து க்கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? நேர்மையான, உண்மையான தேர்தல் என்ற விஷயத்தை கேலிக்கூத்தா க்கி உள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் மீண்டும் உச்சநீதி மன்றத்திற்கு செல்வதை தவிர வேறுவழியில்லை என தெரிவித்துள்ளார்.

;