tamilnadu

img

உள்ளாட்சித்தேர்தல்: வேட்பு மனுதாக்கல்...

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வண்ணாங்குப்பம் ஊராட்சிமன்றத் தலைவர் பத விக்கு என்.சசிகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.ஜி. கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.ரவி, என்.கங்காதரன் ஆகியோர் உடனிருந்தனர்.

எல்லாபுரம் ஒன்றியம் மாளந்தூர் ஊராட்சிக்கு வி.விஜயன் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ரவி, டி.குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூரிவாக்கம் ஊராட்சிக்கு எம்.குணசுந்தரிமோகன்  வெள்ளியள்று (டிச-13) வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தண்டலம் ஊராட்சிக்கு எம்.ரெபேக்கா முத்துக்குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட காக்கவாக்கம்  ஊராட்சிக்கு ஏ.மாரிமுத்து வேட்புமனு தாக்கல் செய்தார். சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.கங்காதரன், வழக்கறிஞர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் அருகில் உள்ள மேல்நல்லாத்தூர்  ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு   ஜி.ஆறுமுகம்  வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ராஜேந்திரன், வட்டச் செயலாளர் ஆர். தமிழரசு, எஸ்.விஜயகுமார், எஸ்.பூங்கோதை, சுலோச்சனா ஆகியோர்  உடனிருந்தனர்.

;