சென்னை, மே 16-தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளில், தீவிரம் காட்டி வரும் மாநிலத் தேர்தல் ஆணையம், இதற்கான வாக்காளர் பட்டியல் குறித்து கடந்த வாரம் அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து மேலும் ஒரு அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.அதில் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1200 வாக்காளர் களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1200 முதல் 2400 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2400 பேருக்கு மேல் இருந்தால் 3 வாக்குச்சாவடிகளும் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.இதே போல், மாநகராட்சிகளில் 1400 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடிக ளும் அமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.