tamilnadu

img

தள்ளாடும் தள்ளுவண்டி, நடைபாதை, தரை கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய வட்டங்களில் வாழைப்  பழம், கூழ், கஞ்சி, பழ வகைகள்,  காய்கறி, வெங்காயம், மக்கா சோளம், கடலை, சிப்ஸ், பஜ்ஜி, போண்டா, பாணிபூரி, பிளாஸ்டிக் பொருள்கள், காலை மாலை உட னடி உணவு வகைகள், பனியன்,  ஜட்டி உட்பட பல பொருட்களை தள்ளு வண்டிகளில் வியாபாரம்  செய்பவர்கள் 4,000க்கும் மேற்பட் டோர் உள்ளனர். கூடைகளில் தலை  சுமையாய் சிறு வியாபாரம் செய்ப வர்கள், தெருக்களிலும், பேருந்து  நிலையங்களிலும், நடைபாதை களிலும், வியாபரம் செய்பவர்கள் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் பூ, முறுக்கு, தின்பண்டங்கள் வியாபாரம் செய்ப வர்கள் 2,000க்கும் மேற்பட்டோரும், காய்கறி உழவர் சந்தை கடைகள்,  சுற்றுப் புறங்களில் விற்பனையா ளர்கள் 1000 பேர் என சுமார் 10,000  பேர் உள்ளனர். தினசரி தெருக்களில்  வியாபாரம் செய்து வரும் வரு மானத்தில்தான் அவர்களின் வாழ் வாதாரம் உள்ளது. 

கொரோனா பரவலை தடுக்க  பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட தால் கடந்த இரண்டரை மாதங்க ளாக ஓசூரில் உழவர் சந்தை மூடப்பட்டுள்ளது.  தனிமனித இடை வெளியை பின்பற்றும் வகையில் காய்கறி கடைகள் ஒரே இடத்தில் இல்லாமல் பல இடங்களில் பிரித்து  அமைக்கப்பட்டது. காவல்துறை யினரும், வருவாய் துறையினரும், மாநகராட்சி நிர்வாகத்தினரும் பெரும்பாலான நாட்கள் நடை பாதை கடைகளை வியாபாரம் செய்ய விடாமல் விரட்டியடிப்பதால் அவர்களின் வாழ்வாதாரம் அடிக் கடி பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகத்தால் டெண்டர் விடப்ப டும். ஆனால் கொரோனா பொது முடக்கத்தால் காரணமாக 2020இல் டெண்டர் விடவில்லை. ஆனால் ஏற்கனவே டெண்டர் எடுத்த வர்களே தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொண்டி ருக்கிறார்கள். மேலும் சுங்கக்  கட்டணம் கடந்த 3 ஆண்டுகளாக 4 ரூபாய், 5 ரூபாய் என இருந்தது.  ஆனால் இப்போது 10 ரூபாய் 50 ரூபாய் வரை மிரட்டி  வசூ லிக்கப்படுவதாக வியாபாரிகள் கூறு கிறார்கள். புதிதாக யாராவது தள்ளு வண்டிகள், நடைபாதை, தரை கடை கள் போட்டால் 100, 200 என கேட்ப தாகவும், கொடுக்காதவர்களை மிரட்டி கடைகள் அகற்றப்படுவ தாகவும் கூறுகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலை பாலத் திற்கு அடியில் இருக்கும் பூக்கடை களில் நெடுஞ்சாலை துறைக்கு பதில் அதே ஆட்கள் சுங்கம் வசூ லிக்கும் கொடுமையும் நடைபெறு கிறது. மொத்த விற்பனையாளர் களிடமிருந்து வாங்கும் சில்லறை காய்கறி விற்பனையாளர்களுக்கு அதே இடத்திலும், விற்கும் இடம் என இரண்டு இடங்களிலும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறு கிறார்கள். கொரோனா பொது முடக்க காலத்திற்கு இவர்கள் யாருக்கும் அரசு சார்பில் எந்த நிவார ணமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடைபாதை  வியா பாரிகளின் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. இதில்  சிஐடியு மாவட்  டச் செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் பீட்டர், கட்டுமான சங்கத் தலைவர்  பிஜி.மூர்த்தி, செயலாளர் சீனிவா சன்,  நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கிருஷ்ணன், தையல் கலைஞர்கள் சங்கத் தலைவர் கோவிந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் உடனடியாக சுங்கக்  கட்டணம் வசூலிக்க டெண்டர் விட வேண்டும். மாநகராட்சி முடிவு செய்யும் அளவு சுங்கக் கட்டணம் மட்டுமே ரசீது கொடுத்து வசூலிக்க வேண்டும், அதிக கட்டண வசூலிப்  பதையும், இரட்டைக் கட்டணம் வசூ லிப்பதையும் தடுக்க வேண்டும், மாநகராட்சி ஆணையர் தலையிட்டு இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர  தீர்வுகாண வேண்டும் உள்ளிட்ட   தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

- ஒய்.சந்திரன்