தமிழக ஊடகங்கள் குறித்து அறிந்து கொள்ள...
இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றம், மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களுக்கு அடுத்த படியாக ஊடகங்கள் தான் நான்காவது தூணாக மதிக்கப்படுகிறது. இத்துறையில் உண்மையை பேசுதல், நியாயத்தை பேசுதல், ஆதாரத்துடன் பேசுதல், என்பவை இதன் அடிப்படை கட்டுமானங்கள் ஆகும்.
எனவே தான் ஊடகங்கள் மக்கள் தொட ர்பு சாதனங்கள் என்று கூறுகிறோம். ஒரு விவசாயியின் பணியை போல, ஒரு மருத்துவரின் பணியை போல ஒரு ஆசிரியரின் பணியை போலவே ஊடகவியலாளர்களின் பணியும் சமூ கத்தை செழுமைப்படுத்தி செப்பனிடும் பணியை செய்து வருகிறது. ஊடக அறிவு பெற்றவர்கள் ஜனநாயகத்தின் வழிகாட்டியாகவும் செவிகளாகவும் இருக்கின்றார்கள்.
ஊடகவியலாளர் பெறும் அத்தனை செய்திகளையும் விசாரணையுடன் விமர்சனப்பூர்வமாக அணுகுவது அவசியமாகிறது. ஊடக அறிவுக் கல்வியைப் பயிலும் அனைவரும் எல்லா காலங்களிலும் திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும்.
தொடர் பயிற்சியின் வழியாகவே திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். ஊடகவியலாளர்கள் இந்த நூலை வாசிப்பதன் மூலம் தமிழக ஊடகங்கள் குறித்தும் ஊடகவியலாளர்களின் கடமைகள் குறித்தும் மேலும் எவ்வாறு திறம்பட செயலாற்ற முடியும் என அறிந்து கொள்ள முடியும்.
“செய்தியறையிலிருந்து
வகுப்பறைக்கு”
நூலாசிரியர் : பீர்முகமது
விலை: ரூபாய் 50
வெளியீடு : “இப்போது”, கிண்டி, சென்னை - 600032
தொடர்பு எண் : 9884360505
தரிசான பூமியை பசுமையாக்கிய வீரப் பெண்மணியின் கதை
“அமைதியின் தூதுவர்கள் மரங்கள் நம் நாட்டில் அல்ல ஆப்பிரிக்க நாட்டில் தான்”. ஆப்பிரிக்க கண்டத்தில் கென்யா நாட்டில் காடுகள் அழிப்பின் காரணமாக பாலைவனமாகி கொண்டிருந்ததை தடுத்து மிகப்பெரிய சோலைவனமாக மாற்றிய வங்காரி மாத்தாய் எனும் வீரப் பெண்மணியின் வரலாற்றை குழந்தைகள் புரியும் வண்ணம் எளிய நடையில் மொழியாக்கம் செய்துள்ளார் நூலாசிரியர் ஆதி வள்ளியப்பன்.
பசுமையான மரங்கள் கொண்ட கென்யா மலைச் சிகரத்தின் அடிவாரத்தில் வசித்து வந்தது வங்காரி மாத்தாய் குடும்பம். சமைக்கத் தேவையான விறகுகளை கூட சுற்றி இருந்த காட்டில் தான் பொறுக்கி எடுத்து வந்து சமைப்பார்கள். இந்த செழிப்பான கிராமத்தில் கரும்பு, சர்க்கரை வள்ளி கிழங்கு, சோளம் போன்ற வைகளை விளைவித்து வாழ்ந்து வந்தார்கள். கிராமத்தில் படித்து வந்த வங்காரி மாத்தாய் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். உயிரியல் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்று நாடு திரும்பி, நைரோபி பல்கலைக்கழ கத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
நாடு திரும்பிய வாங்காரி மாத்தாய்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அடர்ந்த வனப் பகுதியை காணவில்லை. பறவை சத்தங்கள் கேட்கவில்லை. செழிப்பான நிலங்கள் எந்த பயிரும் இல்லாத தரிசு நிலமாக இருந்தது. மீண்டும் அடர் வளமாக மாற்ற முடிவு எடுத்து முதலில் தன் வீட்டில் ஒன்பது மரக்கன்று களை நடத் தொடங்கினார் வங்காரி மாத்தாய். தொடர்ந்து தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளிகளில் மரங்கள் வளர்க்க ஆரம்பித்தார்.
தன் கிராம மக்களிடம் மரம் வளர்ப்பதன் பயன் குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் மரம் நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். கிராமம் புத்துயிர் பெற்றது. அரசாங்கம் இவரது செயலை எள்ளி நகையாடியது மட்டு மல்லாமல் இவரை சிறையில் அடைத்தது. சிறையில் இருந்து மீண்டு வந்த வங்காரி மாத்தாய் பசுமை படை இயக்கம் உருவாக்கி னார். இதன் மூலம் 6 ஆயிரம் நாற்றுப்பண்ணை களை உருவாக்கி 60 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததோடு மட்டுமல்லா மல் அவர்களது வருவாயை பெருக்கிக் கொடுத்தார்.
உலக அமை திக்காக பங்காற்றிய வங்காரி மாத்தாய்க்கு “நோபல் பரிசு” வழங்கிப் பாராட்டி னார்கள். இந்த நூலை படிக்கும் குழந்தைகள் மரம் வளர்ப்பின் அவசியம், காடுகளின் அவசியம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள முடியும். “இந்த பூமி ஆடை இல்லாமல் இருக்கிறது பசுமை போர்வையால் புவியை போர்த்த வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள்” என்று வங்காரி மாத்தாய் தெரிவித்தது போன்று நம் குழந்தைகளும் மரங்களை வளர்த்து பசுமையாக்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
“வங்காரியின் பசுமைத் தூதுவர்கள்”
(ஓர் ஆப்பிரிக்க உண்மை கதை)
நூலாசிரியர் : ஜெனெட் வின்டர்
தமிழில் மொழியாக்கம்: ஆதி வள்ளியப்பன்
விலை : ரூபாய் 90/-
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ட்ரன்
Chennai-600018
தொடர்பு எண்: 044 24332424.
“கற்பனைத் திறனை வளர்த்து மனு அழுத்தத்தைப் போக்கும்”
“ஓரிகாமி” - காகித மடிப்பு கலையில் தாய்வீடு ஜப்பான் நாடு தான். ஓரிகாமி என்னும் சொல் ஜப்பானிய மொழியில் உருவானது. “ஓரி” என்றால் மடிப்பு “காமி” என்றால் காகிதம்.
எனவே காகித மடிப்பு கலையே ஓரிகாமி ஆகும். கத்தரிக்கோல், பசை, நூல் எவ்வித பொருட்களும் இன்றி வெறும் காகிதம் மட்டும் கொண்டு, நம்மிடம் உள்ள கற்பனை திறன் மூலம் பொம்மைகள், வண்ணத்துப்பூச்சிகள், பூக்கள், மேஜை, பெட்டி, விலங்குகள் என ஏராள மான பொருட்களை செய்யும் கலை காகித மடிப்பு கலை. ஓரிகாமி கலையை பழகிக் கொள்ள வயது ஒரு தடையே அல்ல அவரவர் விருப்பம் தான் தேவை. எழுதப்பட்ட காகிதம், காலம் முடிந்த நாட்காட்டிகள், நாம் தினமும் படித்து முடித்த செய்தித்தாள்கள் போன்ற பயன்படாது என்று நாம் ஒதுக்கிய காகிதங்களை உயிருள்ள உரு வங்களாக உருவாக்கும் கலையே காகிதம் மடிப்புகலை.
நம் குழந்தைகள் அதிகம் நேசிப்பது பொம்மைகளை தான். அதுவும் அவர் களது கைகளால் செய்த பொம்மை என்றால் நேசிப்பு, மகிழ்ச்சியும் இரட்டிப்பாகத் தானே இருக்கும். காகித மடிப்பு கலையை பழகிக் கொள்ளும் குழந்தைகள், மாண வர்கள் இயல்பான கற்றலுக்கு வழி வகுக்கும் என்பதோடு அவர்களது படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள இயலும்.
காகிதமடிப்பு கலை பழகிக் கொள்வதன் மூலம் நமக்கு பல்வேறு பிரச்சனைகளால் ஏற்படும் மன அழுத்தம், கோபம், வெறுமை, பதற்றம் ஆகியவற்றிலிருந்து நம்மை மீட்டு இயல்பான நிலைக்கு வர உதவுகிறது என நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தைகள், மாண வர்கள், இல்லத்தரசிகள், ஓய்வுபெற்ற அனைவரும் இக்கலையை பழகிக் கொள்வதன் மூலம் கற்பனை திறனை வளர்த்துக் கொள்வதோடு மன அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபட முடியும். அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல் ஓரிகாமி.
“ஓரிகாமி”
(காகித மடிப்பு கலையின் கதை)
நூல் ஆசிரியர் : தியாக சேகர்
விலை ; ரூபாய் 40/- வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன் மற்றும் ஓங்கில் கூட்டம்
சென்னை -600018.
தொடர்பு எண்: 04424332424