tamilnadu

img

ஆஸ்கர் இறுதி போட்டிக்கான பட்டியலிலிருந்து வெளியேறியது “கூழாங்கல்”  

ஆஸ்கர் விருது இறுதிப்போட்டிக்கான பட்டியலில் இருந்து, இந்தியா சார்பில் இடம்பெற்ற தமிழ் திரைப்படமான ’கூழாங்கல்’ வெளியேறி உள்ளது.  

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா ஆகியோரின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில், உருவான திரைப்படம் கூழாங்கல். பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சர்வதேச அளவிலான பல்வேறு திரைவிழாக்களில் பங்கேற்ற கூழாங்கல், விருதுகளையும் அங்கீகாரங்களையும் குவித்துள்ளது.  

இந்நிலையில், ஆஸ்கர் இறுதி போட்டியில் கூழாங்கல் இடம்பெறவில்லையென்று தகவல் வெளியானது.  அடுத்த ஆண்டு மார்ச் 22-ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 94-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது. சிறந்த திரைப்படம், நடிகர், நடிகையர், இயக்குநர் என இதன் இறுதிப்போட்டியில் இடம்பெறும் படைப்புகளின் பட்டியல் நேற்றிரவு வெளியானது. அந்தப் பட்டியலில் கூழாங்கல் இடம்பெறவில்லை.  \

இதுகுறித்து கூழாங்கல் படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன், இறுதிப் பட்டியலில் தங்கள் படம் இடம்பெற்றிருந்தால் மகிழ்ச்சியளித்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூழாங்கல் திரைப்படத்தை சிறப்பாக எடுத்திருக்கும் வினோத்ராஜ், ஆஸ்கருக்கு பரிந்துரைத்த இந்திய நடுவர் குழு ஆகியோருக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.

;