tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

விழுப்புரம், மே 4- புதுச்சேரி மாநிலம் முத்தி யால்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கவியரசன் (வயது 50). இவர் மீது சாராயம், மதுபாட்டில்கள் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் உள்ளன.  கடந்த 5.4.2025 அன்று புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி வந்த கவியரசனை கோட்டக்  குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்த னர்.  தொடர்ந்து இவர் இதுபோன்ற குற்றச்செயல்க ளில் ஈடுபட்டு வருவதால் அத்தகைய செயல்களை தடுக்கும்பொருட்டு கவிய ரசனை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி மாவட்ட ஆட்சி யருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சர வணன் பரிந்துரை செய்தார். மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தர வின் பேரில் கவியரசனை தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

உணவில் தேரை: பிரபல ஓட்டலுக்கு சீல்

பூந்தமல்லி, மே 4- சென்னை பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது நாவலடி என்கிற பிரபல தனியார் ஓட்டல் இயங்கிவருகிறது. இந்த ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் சாப்பிட்ட உணவில் முழு தேரை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற போது அதில் முழு தேரை வெந்து கிடந்தது. இதையடுத்து, உணவு சாப்பிட்ட வர்கள் ஓட்டல் நிர்வாகத்திடம் தேரை குறித்து கேட்டனர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நாவலடி ஓட்டல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்  புகார் தெரிவித்ததன் அடிப்படை யில் சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.