சென்னை:
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, இந்தியன் ஆயில் நிறுவனம், ஒரு புதுமையான முன்முயற்சியாக மரம் நடுவோம் மகிழ்ச்சி அடைவோம் (#TreeCheers) என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ், நவம்பர் 12 - நவம்பர் 16, 2020 தேதிகளில் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் தங்கள் புதிய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வாடிக்கையாளர்கள் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒரு மரக்கன்றை நடும்.இதனுடன், நிறுவனம், தங்களுடைய லாயல்ட்டி புரொக்ராமின் (எக்ஸ்ட்ரா ரிவார்ட்ஸ்) காம்ப்ளிமென்ட்டரி மெம்பர்ஷிப்பையும் போனஸ் ரிவார்ட் பாயின்ட்கள் உடன் அளிக்கும்.இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களுக்கு தங்கள் புதிய வாகனத்துடன் வருகிற (4/3/2 சக்கர வாகனங்கள்) வாடிக்கையாளரை இந்தியன் ஆயில் கஸ்டமர் அட்டெண்டன்ட், வரவேற்று தங்களது மொபைல் எண், பெயர் மற்றும் வாகனம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்வார். #Tree, Cheers திட்டத்தில் பதிவு பெற்றது பற்றிய குறுஞ்செய்தி வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். மரக்கன்றை நடும் பணி முடிந்ததும் அவர்களுக்கு நடப்பட்ட மரக்கன்று பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும்.
மேலும், வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறுஞ்செய்தியில் உள்ள லிங்க்கில் இருந்து பசுமைக்கு அவர்கள் அளித்த பங்களிப்பை அங்கீரிக்கும் பேட்ஜை டவுன்லோடு செய்து அணிந்து கொள்ளலாம்.#TreeCheers பற்றி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா கூறுகையில், “நாங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்து வரும் அதே வேளையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். மேலும், சமூகத்தின் தரத்தை விரிவுபடுத்தி முழுமையான வர்த்தகச் சூழலை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு புதிய வாகனத்திற்காக மரக்கன்றுகள் நடுதல் என்கிற இந்த தனித்தன்மை வாய்ந்த திட்டத்தின் மூலம் தனிநபர்களை வருங்கால பசுமை உலகம் படைத்திட பங்களிப்பை அளிக்க செய்ய முடியும். ஒவ்வொரு முயற்சியும் நன்மை பயக்கும். சிறு துளி பெருவெள்ளம்” என்றார்.