tamilnadu

img

“பொதுத்துறை வங்கிகளை காப்போம்” வங்கி ஊழியர்கள் ராணிப்பேட்டையில் பிரச்சார இயக்கம்

ராணிப்பேட்டை, டிச. 11 –  பொதுத்துறை வங்கி பாதுகாப்பு, மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் பாது காத்திடுவோம் என்று முழுக்கத்தை முன்வைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் (பெபி) சார்பில் மாநிலத் தலைவர் கணேசன் தலைமையில் 19 வது மாநில மாநாடு பிரச்சார இயக்கம் புதனன்று (டிச. 11) அரக்கோணத்தில் புறப்பட்டது.

இந்தியன் வங்கி ஊழியர் அசோசி யேஷன் தமிழ்நாடு 19வது மாநில மாநாடு வேலூரில் 14, 15 தேதிகளில் நடை பெறுகிறது. அதையொட்டி, அரக்  கோணத்தில் இருந்து புறப்பட்ட பிரச்சார வாகனத்தை அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செய லாளர் எஸ். ராமன் துவக்கி வைத்தார். நெமிலி வழியாக முத்துக்கடை பேருந்து நிலையம் வந்தடைந்தது.  அங்கு, சாரல் கலைக்குழு நிகழ்ச்சியுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் இந்த பிரச்சார பயண குழுவை வரவேற்று சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தா. வெங்கடேசன், ஆ. தவராஜ், ஆர். மணிகண்டன், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் பி.மணி, பொருளாளர் ரமேஷ், இந்திய வங்கி ஊழியர் அசோசியேஷன்  மாவட்டச் செயலாளர் பி. பார்த்திபன், துணைத்தலைவர் பிலவேந்திரன் தாஸ், பாலகிருஷ்ணன், கண்ணன், முத்து, சீனிவாசன், பால கிருஷ்ணன்,சாரல் கலைக்குழு சுரேந்திரன், பாலு, தவில் விநாயகம், சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.