“நாட்டில் ஒரு புறம் மில்லியனர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாயாஜால தந்திர காட்சிகள் போல் புதிய, புதிய மில்லியனர்கள் உருவாக்கப்படுகிறார்கள். சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் உழைப்பும், உரிமைகளும் சுரண்டப்பட்டு, வெகு சிலர் கொள்ளை அடிப்பதை சட்டப்பூர்வ ஏற்பாடுகள் செய்து பாதுகாப்பதில் ஆட்சியாளர்கள் அக்கறை காட்டி வருகின்றனர். உழைக்கும் மக்களின் குடும்ப சேமிப்பு குறைந்து வருவதும், அதி கரித்து வரும் கடன்சுமையும் வாழ்க்கை துயரத்தை வெளிப்படுத்துகிறது. சட்டப்பூர்வ உரிமைகள் மறுக்கப்பட்டு, நவீன கொத்தடிமை நிலைக்கு நெட்டித் தள்ளுவதை தடுத்து நிறுத்த ஜனநாயக முறையில், தொழிற்சங்கம் அமைத்து போராடும் சுதந்திரத்தை பாதுகாப்போம். அதிபயங்கர ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம். வகுப்பு வாத, பாசிச சக்திகளை தோற்கடிப்போம். ஒருங்கிணைந்த மக்கள் நல்வாழ்வு கொள்கைகளை அதிகாரத்தில் அமர்த்துவோம் என உலக தொழிலாளர் தினத்தில் உறுதி ஏற்போம்!”