வருமான வரி செலுத்தாத மக்களுக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும், அமெரிக்காவில் காவல் துறையின் நிறவெறியால் ஜார்ஜ் ப்ளாய்ட் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 9) கடலூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும், புதுவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.