tamilnadu

நடிகர் சங்க தலைவர் தேர்தல்:  நாசர், பாக்யராஜ் வேட்பு மனு தாக்கல்

 சென்னை, ஜூன் 9- தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் தேர்தலில் போட்டி யிட ஒரே நாளில் தற்போதைய தலைவர் நாசர், நடிகர் பாக்ய ராஜ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பதவி காலம் செப்டம்பர் மாதம் முடி வடைந்தது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்கு தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நிய மிக்கப்பட்டுள்ளார். ஜூன் 23 ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையன்று தொடங்கியது.  நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் இரண்டா வது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் நடிகர் சங்க தலை வர் தேர்தலில் போட்டியிட நடிகர் பாக்யராஜூம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

;