tamilnadu

திருவான்மியூரில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

சென்னை, ஜூன்12- சென்னை திருவான்மியூர் அவ்வை நகரில் வசித்து வந்தவர் கவுதம். வயது 29. இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். இவர் செவ்வாயன்று (  ஜூன்11)   திரு வான்மியூர் ஜெயந்தி தியேட்டர் சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென 3 பேர் அவரை சுற்றி வளைத்த னர்.

தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கவுதமை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிர் பிழைப்ப தற்காக ஓட்டம் பிடித்தார். இருப்பினும் 3 பேரும் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த  அவரை மீட்டு அடையாறில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கவுதம் உயிரிழந்தார். அவரை வெட்டிக் கொன்ற கும்பல் தப்பி ஓடி தலை மறை வானது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேரை கைது செய்தனர். கண்ணகி நகர் மற்றும் கொட்டிவாக்கம் பகுதிகளை சேர்ந்த இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வந்துள்ளது. கொலையுண்ட வழக்கறிஞர் கவுதம் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலரை ஜாமினில் எடுத்துள்ளார். இது தொடர்பாக கமலேஷ், கார்த்தி, நித்யா ஆகிய 3 பேருக்கும், வழக்கறிஞர் கவுதமுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இதனால் அவர்கள் கவுதமை கொலை செய்வதற்கு நேரம் பார்த்து காத்தி ருந்தனர். இந்த நிலையில்தான் இந்த கொலைச்சம்பவம் அரங்கேறியது. அடையாறில் உள்ள தனியார் மருத்துவ மனையில்  உயிரிழந்த கவுதமின் உடலை ஒப்படைப்பதற்கு முன்னர் மருத்துவமனை நிர்வாகம் ரூ. 50 ஆயிரம் பணம் கேட்டுள்ளது.

இதனால் கவுதமின் நண்பர்களான சக வழக்கறிஞரிகளும், உறவினர்களும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் சென்று சமரச பேச்சு நடத்தியதையடுத்து ரூ.30 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் உடலை ஒப்படைத்தது. இதன் பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.