tamilnadu

img

நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்கள் பதிவு துவக்கம்

வேலூர், ஜூலை 16- காட்பாடி ஒன்றியம் கண்டிப்பேடு ஊராட்சியில் 100 நாள்  திட்டப் பணியாளர்கள், கூட்டம் நடைபெற்றது. 104 பேர் உறுப்பி னர்களாக பதிவு செய்தனர். தங்களுக்கு முழுமையான வேலையும், அதற்கான ஊதிய மும் உடனுக்குடன் வழங்க வேண்டும், வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், ஊராட்சியில் நிலவும் குடிநீர் பற்றாக் குறை, பேருந்து வசதி, எரிமேடை வசதி உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடத்துவது என வும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.