சென்னை தமிழக அரசால் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆய்வு செய்து ஆலோசனை வழங்கிட அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்சி.ரங்கராஜன் குழு பரிந்துரையின் அடிப்படையில் பேரூராட்சி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உடனடியாக வேலைஉறுதித்திட்டத்தை துவங்கிட வேண்டுமென வலியுறுத்தி செவ்வாயன்று (அக்டோபர் 06) தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.