tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னையில் விமானம் மீது  மீண்டும் லேசர் ஒளிவீச்சு  

சென்னை, ஜூன் 10- சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது செவ்வாயன்று காலை லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாயன்று அதிகாலை வந்தது. விமானம் தரையிறங்கும் நேரத்தில், சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது சக்தி வாய்ந்த லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த விமானிகள், விமானத்தை பத்திரமாக தரையிறக்கினர். இதனால், விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது. கடந்த இரண்டு வாரங்களில் நடைபெறும் மூன்றாவது சம்பவம் இதுவாகும். சென்னை விமான நிலையத்தை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு டிரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க விடுவதற்கும், லேசர் ஒளி அடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்து குறிப்பிடத்தக்கது.

கடன் வாங்கி தருவதாக  ரூ.27 லட்சம் மோசடி:ஒருவர் கைது

சென்னை, ஜூன் 10- திரு.வி.க நகர் பகுதியில் வங்கியில் கடன் வாங்கி தருவ தாக கூறி பெண்ணிடம் ரூ.27 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை, மேற்குமாம்பலம், பிள்ளையார் கோயில் தெரு வில் பிரியங்கா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு பிரியாங்கவிற்கு அவரது தோழி மூலம் திரு. வி.க நகர் பகுதியைச்சேர்ந்த ரவிகுமார் என்பவர் அறிமுக மாகியுள்ளார். பிரியங்கா புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வதை அறிந்த ரவிகுமார் வங்கி மூலம் லோன் பெற்று தருவதாகவும், அதற்கு அடமான கட்டண மாக ரூ.27 லட்சம் செலுத்த வேண்டும் என்று பிரியங்கா விடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பிரியங்கா பல தவணைகளாக ரூ.27 லட்சத்தை கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி ரவி குமார் லோன் வாங்கி தராமலும், பணத்தை திரும்ப தரா மலும் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து பிரியங்கா திரு.வி.க நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்த தின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து  ரவிகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சைதாப்பேட்டையில் 394 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

சென்னை, ஜூன் 10- சைதாப்பேட்டை பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற 394 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர். சென்னை சைதாப்பேட்டை காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் குழுவினர் சைதாப்பேட்டை, ஜீனிஸ் ரோடு ரயில் நிலையம் அருகே வாகன தணிக்கை யிலிருந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பாலமுருகன் (35), ஆசிப் பேக் (33), ராஜேஷ் கண்ணன் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள குடோனில் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்தி ருந்த ஹான்ஸ், கூலிப், விமல் உட்பட மொத்தம் 394.8 கிலோ கிராம் எடை கொண்ட குட்கா புகையிலை பொருட்கள், ரொக்கம் ரூ.1,80,000 , 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

கனமழையால்  வானில் வட்டமடித்த விமானங்கள்

சென்னை, ஜூன் 10- சென்னை தாம்பரம், விமானநிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் செவ்வா யன்று கனமழை பெய்தது. மழையின் காரணமாக விமான நிலையத்தில் தரை யிறங்க முடியாமல் 8 இண்டிகோ விமானங்  கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. பின்னர் மழை நின்றவுடன பத்திர மாக  தரையிறங்கின.

கோவிலம்பாக்கத்தில் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச்சு

வேளச்சேரி, ஜூன் 10- கோவிலம்பாக்கத்தில் 2வது முறையாக 3 வீடுகளின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் உடனடியாக பிடிக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், காந்திநகர், 19வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மனைவி டில்லி அம்மாள். இவர்களது மகன்கள் வினோத்(32), கார்த்திக்(30). இருவரும் வேன், ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஞாயிறன்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள் வினோத் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதேபோல் 7வது தெருவைச் சேர்ந்த பெயின்டர் நித்தியானந்தன்(40) வீடு மற்றும், தந்தை பெரியார்நகரில் ஒரு வீடு என அடுத்தடுத்து மூன்று வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

புச்சிரெட்டிபள்ளி மக்களுக்கு நூறு நாள்  வேலை வழங்க வேண்டும்: தவிச மனு

திருவள்ளூர், ஜூன் 10- திருத்தணியை அடுத்த புச்சிரெட்டி பள்ளியில்  உள்ள மக்களுக்கு நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஜூன் 10),  மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகில் உள்ள புச்சிரெட்டிபள்ளி ஊராட்சி யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நூறு நாள் வேலையில் ஈடுபட்டு வரு கின்றனர். இங்கு நாள் ஒன்றுக்கு வெறும் 15 நபர்களுக்கு மட்டும் வேலை வழங்குவ தாக கூறுகின்றனர். இதனால் பலர் வேலை இன்றி தவிக்கின்றனர். இந்த நிலையில் அனைவருக்கும் நூறு நாள் வேலையை வழங்க வேண்டும் என வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிளை செயலாளர் நேதாஜி தலைமையில் புச்சிரெட்டிபள்ளி ஊராட்சி மன்ற அலு வலகம் முன்பு ஏராளமான பெண்கள் கூடினர். தகவலறிந்த கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்பதாகவும்  தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி, விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர்  பிருந்தாவனம்,  செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரத்தில் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், ஜூன் 10- காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 383 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் குறைதீர் கூட்டம்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிட மிருந்து மொத்தம் 383 கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நட வடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) சத்யா, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சு.சீனிவாசன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.