tamilnadu

img

நில எடுப்பு கருத்துக்கேட்பு கூட்டம் விவசாயிகள் ஏமாற்றம்

செங்கல்பட்டு, மார்ச் 13- கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு அரசு அதி காரிகள் வராததால் விவசாயிகள்  4 மணி  நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி னர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட படூரிலிருந்து ஆலத்தூர் வரை  பழைய மகாபலிபுரம் சாலையைத் தொழில்நுட்ப துரித சாலையாக மாற்றும் வகையில் ஆறு வழிச் சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்கான நில எடுப்பு பணிகளும் துரித மாக நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட திருப்போரூர், தண்டலம், வெங்கலேரி ஆகிய  கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் தலைமையில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில்  வெள்ளி யன்று (மார்ச் 13) நடைபெறும் என விவசாயி களுக்கு நில எடுப்பு தனி வட்டாட்சியர் மூலம்  அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. கடிதம் பெறப்பட்ட விவசாயிகள் வெள்ளி யன்று காலை 10 மணியளவில் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கிற்கு வந்தனர். கூட்டத்தை ஏற்பாடு செய்த நில எடுப்புத்துறை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையிடம் கூட்ட அரங்கில் கூட்டம் நடத்த  அனுமதி பெறாமல்  இருந்துள்ளனர். மேலும் கூட்டரங்கில் கல்லூரி  நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இதனால் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் அமரக் கூட இடம் இல்லாமல் காத்துக் கிடந்த னர். காலை 11  மணிக்கு துவங்க வேண்டிய கருத்துக் கேட்புக் கூட்டம் மதியம் 1 மணி  வரையிலும் அரசு அதிகாரிகள் யாரும் வராத தால் துவங்கப்படவில்லை. இதனால் ஆத்திர மடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  சென்று முறையிட்டனர். பின்னர்  மனுவை கொடுத்துவிட்டு ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது கூட்டத்திற்கு 11 மணிக்கு வரவேண்டும்  என அழைப்பானைக் கொடுத்திருந்தனர். அதன்படி கூட்டத்திற்கு வேன் வைத்துக் கொண்டு வந்திருந்தோம் அரசு அதிகாரிகள் மதியம் 1 மணி வரை வரவில்லை. மருத்து வக்கல்லூரி கூட்டரங்கில் எங்களை அனு மதிக்கவும் இல்லை சாலையோரத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அமர்ந்திருந்தோம். அதிகாரிகள் பெயரள விற்கே இந்த கூட்டத்தை நடத்த முடிவு  செய்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிய  வருகிறது. மேலும் கையகப்படுத்தும் இடத்திற்குச் சரியான விலை நிர்ணயிக்காமல் விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவிக்க கூட்டத் திற்கு வந்தால் அதிகாரிகள் வரவில்லை. மீண்டும் கருத்துக் கேட்பு கூட்டத்தை பாதிக்  கப்பட்டுள்ள எங்கள் கிராமத்தில் நடத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.