நில பிரச்சினை: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
கடலூர், மே 19- நிலப் பிரச்சனையில் விவசாயி ஒருவர் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விவசாயி ஒருவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் வந்தார். அவர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், உடனே தடுத்து நிறுத்தி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருமாணிக்குழி சேர்ந்த வாசுதேவன் (வயது 49) என்பதும், முந்திரி பயிரிட்டுள்ள அவருக்கு சொந்தமான இடத்தை டி.புதுப்பாளையத்தை சேர்ந்த காசிநாதன் என்பவரிடம் ரூ.12 ஆயிரத்துக்கு அடமானம் வைத்துள்ளார். வாங்கிய பணத்தை தற்போது திருப்பி கொடுத்துள்ளார். ஆனால், அந்த நபர் பணத்தை வாங்க மறுத்துள்ளார். மேலும், அந்த நிலத்திற்கான பட்டாவையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதற்கிடையே வாசுதேவன் மனைவி தங்கேஸ்வரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக, கணவன்- மனைவி இருவரையும் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரயில்வே சுரங்கப்பாதையி
ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீர் அதிகரித்து வரும் சாலை விபத்து
ராணிப்பேட்டை, மே 19 - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக ஆற்காடு - பொன்னை, லாலாப்பேட்டை, சிப்காட் - 3, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அக்ராவரம் ரயில்வே சுரங்க பாதையை கடந்து செல்ல வேண்டும். இந்த சுரங்கப் பாதையின் தரை தள வழி பகுதி அடிக்கடி பெயர்ந்தும், தூர்ந்தும், சிதிலமாகி, மேடு பள்ளங்களாக படுமோசமாக சிதலம் ஆகிவிடுகிறது. வெயில் காலங்களில் கூட நீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் விழுந்து எழுந்து விபத்துக்குள்ளாகி வருவது அதிகரித்து வருகிறது. கனரக வாகனங்களின் டயர்கள் பழுதாகி விபத்துக்கள் ஏற்படுகிறது. பாதசாரிகள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் இதை நடந்து கடக்க முடியாமல் சிரமப்பட்டு இரயில்வே இருப்புப் பாதையை அபாயகரமான முறையில் கடந்து செல்கின்றனர். குண்டும், குழியுமாக உள்ள சாலை இருபுறமும் நீர் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் சீர்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி தலைமையில் திங்களன்று (மே. 19) மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா விடம் கோரிக்கை மனு அளித்தனர்.