tamilnadu

img

மீன் பிடிப்புக்காக ஏரி நீர் வெளியேற்றம்: விவசாயம் பாதிக்கும் அபாயம்

விழுப்புரம் மாவட்ட மொத்த மக்கள் தொகை யில், 75 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் சுமார் 5.68 லட்சம் பண்ணை குடும்பங்கள் உள்ளன. இதில் சுமார் 91  சதவீதம் பேர் சிறு, குறு விவசாயிகள். பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்கின்றனர். மேலும், மாவட்டத்தில் உள்ள கோமுகி, மணி முக்தா, வீடுர் ஆகிய அணைகள் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணை மூலம் 53 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி  பெறுகின்றது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப் பான 7 லட்சத்து 22 ஆயிரத்து 203 ஹெக்டரில் 47 சத வீதம் (சுமார் 3 லட்சத்து 37 ஆயிரம்  ஹெக்டர்) நிகர  சாகுபடி பரப்பளவாக உள்ளது.

இந்த பரப்பளவில் 4 லட்சத்து 75 ஆயிரம் ஹெக்ட ரில் பயிர் சாகுபடி நடைபெறுகிறது. கடந்த 3 ஆண்டு களாக பருவ மழை பொய்த்துப் போனதால், கோடை காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுபாட்டை சந்தித்தது. மேலும் விவசாயிகளும் நடவு செய்த கரும்பு, நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கடுமை யான வறட்சி காரணமாக கருகிப் போனது. இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை  ஓரளவுக்கு கை கொடுத்ததால்  சுமார் ஆயிரத்துக்கும்  மேற்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களுக்கு நீர் வரத்து  இருந்தன. ஆனாலும் ஏரி, குளங்களின் நீர் வரத்து  வாய்க்கால்கள்முறையாக  பராமரிக்கப்படாத்தால் பல ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து குறைந்தது. ஏரி களில் மழைநீர் நிறைந்தவுடன் மீன் குத்தகை விடு வது வழக்கமான செயல். இதில் பொதுப் பணித்துறை ஏரிகள், உள்ளாட்சி துறை ஏரிகள்  என இரண்டு பிரிவு உள்ளது. ஆனால் மீன் குத்தகை  விடுவதில் எந்த பாகுபாடும் இல்லாமல் உள்ளூர்  அரசியல் புள்ளிகளுடன் கூட்டு சேரும் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் சொற்ப தொகைக்கு ஏலத்தை விட்டு, அரசு கஜானாவுக்கு வரவேண்டிய சில  கோடிகளை  அவர்களோடு சேர்ந்து அதிகாரிகள்  ஏப்பம் விடுகின்றனர். ஏரிகளில் மீன் குத்தகை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் தங்கள் லாபத்திற்காக ஏரிகளில் உள்ள நீரை வெளியேற்றி மீன் பிடித்து  வியாபாரம் செய்கிறார்கள்.

குத்தகைதாரர்கள் ஏரி மற்றும் குளங்களில் உள்ள நீரை வெளியேற்றி விடுவதால் தேவை யான குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான  தண்ணீர் தட்டுபாடு ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் மிக வேகமாக குறை வதால் கிணற்று மற்றும் ஆழ்துளை பாசனமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஏரிகளில் இருந்து  நீரை வெளியேற்றும் குத்தகைதாரர்கள் மீது உரிய  நடவடிக்கை எடுத்து, முறையாக ஏரி குளங்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொன்னுசாமி