tamilnadu

img

சென்னையில் கொரனோ வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம்

சென்னை,ஜன.30- கொரனோ வைரஸ் பாதிப்பை கண்டறியும் ஆய்வகம் சென்னையில் நாளை (வெள்ளி) முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.பின்னர் அமைச்சர் செய்தியாளர்க ளிடம் கூறுகையில், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் ஆகிய நாடுகளில் கொரனோ வைரஸ் பரவிய தகவல் வந்ததில் இருந்தே தமிழக அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

;