ஆவடி, செப். 2- மாநகராட்சி துப்பரவு உள்ளிட்ட பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்று ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.சுந்தர ராஜன் வலியுறுத்தினார். மாநகராட்சி பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது, பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப்பணி களை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் ஆவடி தொகுதி குழு சார்பில் ஆவடி மாநகராட்சி முன்பு திங்க ளன்று (செப். 2) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன் பேசுகையில், “அரசு அரசாணை 152 மூலம் இனி அரசு துறைகளில் நிரந்தர ஊழியர்களை பணியமர்த்து வதில்லை என்றும், (அவுட் சோர்சிங்) ஒப்பந்த முறை யில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து விட்டது. தூய்மை பணியை ஒடுக்கப்பட்ட மக்கள் தான் மேற்கொள்கிறார்கள். இந்தப் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதை ஏற்க முடியாது. மாநகராட்சி பணி என்பது சுகாதார மான குடிநீர் வழங்குவது. சாலை அமைப்பது. முறை யாக கழிவு நீரை வெளி யேற்றுவது. தினசரி குப்பை களை அகற்றுவது. இதற்கு தான் வரி வசூல் செய்யப் படுகிறது. ஆனால், ஆவடி நகராட்சி மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்பட்ட 3 ஆண்டுகளாகியும் இது வரை குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு பல பகுதிகளில் வழங்க வில்லை. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியு மாக காட்சியளிக்கிறது. ஆவடியில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள புழல் ஏரியில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து வழங்க முடியும். அதேபோல் கழிவு நீரை சுத்தி கரித்து அருகில் உள்ள கூவம் ஆற்றில் விட முடியும். இப்ப டிப்பட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்ள மாநகராட்சியும், அரசும் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொகுதி செயலாளர் அ.ஜான் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், எம்.ராபர்ட் ராஜ், சு.பால்சாமி, எஸ்.வேம்புலி ஆகியோர் பேசினர்.