சென்னை,டிச.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திங்களன்று (டிச.25) சென்னை முகாம் அலுவல கத்தில் சந்தித்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணப் பணி களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்திற் கான காசோலையை வழங்கினார்.
அப்போது, இயற்கை பேரிடரின் போது, சவால்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியை சிறப்பு டன் ஆற்றியதற்காக பாராட்டினார்.
இந்து சமயம் மற்றும் அறநிலை யங்கள் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உடனிருந்தார்.