கட்டுப்படியான விலை கிடைக்காமல் பரிதவிக்கும் கிருஷ்ணகிரி மா விவசாயிகள்!
கிருஷ்ணகிரி, ஜூன் 4- கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா விவ சாயம் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட அதிகமான மற்றும் திரட்சியான மாங்காய் விளைச்சல் கிடைத்துள்ள நிலை யில், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். விலை வீழ்ச்சியின் தாக்கம் மாங்காய் பருவத்தின் தொடக்கத்தில் விற்பனை மிகவும் மந்தமாகவும் குறைந்த விலைக்கும் விற்கப்பட்டு வந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மா விவசாயிகள், வியாபாரிகள், மாங்கூழ் தொழிற்சாலையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்ற னர். இதில் குறைந்தபட்சம் கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக ஒப்புக்கொள்ளப் பட்டது. ஒப்பந்த மீறல் தொழிற்சாலை உரிமையாளர் கள் தற்போது விவசாயிகளிடம் கிலோ ஒன்றுக்கு 3, 5, 6 ரூபாய் என அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர். கட்டு படியாகாமல் அறுப்பு கூலிக்கு கூட வழி இல்லாததால் பெரும் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கொள்ளாத பல விவசாயிகள் மாங்காயை அறுவடை செய்யாமல் மரத்தில் விட்டுவிட்டுள்ளனர். விவசாயியின் அனுபவம் மத்தூர் அருகே கொட மாண்டபட்டி யைச் சேர்ந்த மா விவசாயி பிரகாசம் தனது அனு பவத்தைப் பகிர்ந்து கொண்டார். 12 ஏக்கரில் ரூ.8 லட்சம் செலவில் மா விவசாயம் செய்துள்ள அவரது தோட்டத்தில் முன்பை விட அதிகமாக சுமார் 150 டன்னுக்கு மேல் மாங்காய் விளைந்துள்ளது. போதிய விலை கிடைக்காததால் அறுவடை கூலிக்கு கூட பணம் கிடைக்காத நிலையில் ஏற்கெனவே நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மாங்காயை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டதாக கூறினார். நோய்த் தாக்குதல் அபாயம் மாங்காய்களில் ஆந்திராக்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் மாங்காய்களை பறிக்கவில்லை என்றால் முற்றிலும் நோய் பாதித்து மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் எச்சரித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் தலையிட்டு மா விவசாயம் செய்து உள்ள பகுதி களை பார்வையிட்டு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட குறைந்தபட்ச விலைக்காவது கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவ சாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். மாறாக நோயால் அழியும் மாங்காய் விளைச்சலுக்கு மாவட்ட நிர்வாகம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.