tamilnadu

கேரள குண்டு வெடிப்பு தமிழக எல்லையில் உஷார் நிலை

சென்னை,அக்.29-  கேரளாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அம் மாநிலத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட் பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடை பெற்றது. இதில் 2000க்கும் அதிக மானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இந்த நிலையில் காலை 9 மணியளவில் இந்த கூட்டத்தில் மூன்று இடங்களில் பயங்கர வெடி விபத்துகள் ஏற்பட்டன. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 30க்கும் மேற்பட் டோர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், குண்டுவெடிப் பில் தொடர்புடைய குற்றவாளிகள் தமிழகத்தில் ஊடுருவலாம் என்ற அடிப்படையில், கேரள மாநிலத்தை ஒட்டியிருக்கக்கூடிய, திருநெல் வேலி, கன்னியாகுமரி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாது காப்பை பலப்படுத்தவும், தீவிர கண்காணிப்பு பணிகளை மேற் கொள்ளவும் தமிழக காவல்துறை  தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால்  உத்தரவிட்டுள்ளார்.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் ஏதேனும் துப்பு கிடைக்கலாம் என்ற நோக்கில், கேரள மாநிலத்தை ஒட்டிய எல்லை யோர தமிழக பகுதிகளில் காவல் துறை சோதனை முடுக்கிவிடப் பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழ கத்தில் பாதுகாப்பை பலப்படுத் தவும், குற்றவாளிகள் தமிழகத்துக் குள் புகாத வண்ணம் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும் காவல் துறையினருக்கு  அவர்  உத்தரவிட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.