ஜமாபந்தியில் சாதி சான்று கேட்ட காட்டு நாயக்கன் சமூகத்தினர்
ராணிப்பேட்டை, ஜூன் 28 – ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் நடை பெற்று வந்த ஜமாபந்தியில் காட்டுநாயக்கன் சமூகத்தைச் சார்ந்த பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சாதி சான்றிதழ் வழங்க கோரி சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் ஆர். வெங்கடேசன் தலைமையில் செவ்வாயன்று (ஜூன் 25) மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் சாதி சான்றிதழில் எம்பிசி ஜோகி காட்டுநாயக்கன் என குறிப்பிட்டுள்ளதை எஸ்டி காட்டுநாயக்கன் என்று சான்றிதழ் வழங்க வேண்டும், அதேபோல் நெமிலி கரியா குடல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசித்து வரும் அருந்ததி இன மக்களுக்கு அரசு இலவச வீட்டுமனை ஒதுக்கி 84 வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகா தேவி சரவணன் தலைமையில் ஜமாபந்தியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மதுரையில் தமுஎகச பொன்விழா: திரளாக பங்கேற்க புதுச்சேரி கலைஞர்கள் முடிவு
புதுச்சேரி,ஜுன் 28- தமுஎகச வின் 50 ஆவது ஆண்டு பொன் விழா ஜூலை 13 மதுரையில் நடைபெறுவதையொட்டி புதுச்சேரி கலைஞர்கள் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது
முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச செயற்குழு கூட்டம் சங்கத் தலைவர் உமாஅமர்நாத் தலைமையில் இலாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன் சங்கத்தின் எதிர்கால வேலைகள் குறித்து பேசினார். பிரதேச செயலாளர் கலியமூர்த்தி, நிர்வாகிகள் லெனின்பாரதி, கோவிந்தராஜன், அன்பழகன், தமிழ்மணி, விநாயகம், பச்சையம்மாள், அருண்குமார், கணேசன், சிந்துஜா உட்பட பலர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி செயல்பாடுகளை ஒரு வரலாற்று புத்தகமாக தொகுத்து எழுதுவது என்றும், சிந்து சமவெளி நாகரிகத்தின் நூற்றாண்டை கொண்டாடும் விதத்தில் சிறப்பு கருத்தரங் கம் மற்றும் கலை இரவுகள் புதுச்சேரியில் நடத்துவது என்றும் சங்கத்தின் புதிய கிளைகளை துவக்குவது, மதுரை யில் நடைபெறவுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழாவில் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.