சென்னை, ஆக. 23 - முன்னாள் முதல்வர் கலைஞர் எழுதிய நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக, கலைஞரின் புதல்வியும் எம்.பி.யுமான கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார். “கலைஞர் எழுதிய நூல்களை நாட்டுடை மையாக்க அனுமதி அளித்த தனது தாயார் ராசாத்தி அம்மாள், இதை ஏற்ற தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி” எனவும், “கலை ஞரின் படைப்புகள் அனைத்தும் அதிக அளவில் மக்களிடம் சென்று சேரும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.