tamilnadu

img

பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: கே.பாலகிருஷ்ணன்

சென்னை, ஜூலை 7- அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரி யர்களின் பணிமேம்பாட்டிற்கான (CAS) நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னை  எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஞாயிறன்று (ஜூலை 7 ) உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தை துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிரு ஷ்ணன் பேசுகையில் ,” பல்கலைக்கழக பேராசிரியர்களின் நியாயமான கோரிக் கைகளை நிறைவேற்றிட மாநில அரசும் உயர்கல்வித்துறையும் உடனடியாக நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

 மேலும், “உதவி பெறும் கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தலாம். மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதியை செலவழிக்கா மல் திரும்ப அரசுக்கு அனுப்புகின்றனர். அரசுக்கு திரும்ப அனுப்புவதில் பயன் ஒன்றும் இல்லை. உரிய பணி மேம்பாட்டு ஊதியத்தை வழங்கிட அரசாணை பிறப்பித்தும், அதை வழங்குவதற்கு ஏன்  தாமதம்? பல்கலைக்கழக பேராசிரி யர்களின் கோரிக்கையை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம்” என்றும் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத்  தலைவர் பேராசிரியர் எம்.எஸ். பால முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முனைவர் ஆர். சரவணன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரை யாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத் முடித்து வைத்து பேசினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் உறுப்புக் கல்லூரிகளின் 116 ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு, 7 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும்.

தமிழ்நாடு தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம். 1976, அதன் விதிகளில் உரிய  திருத்தங்களை கொண்டுவர, சட்டபூர்வ திருத்தக்குழுவை உடனே அமைத்திட வேண்டும். தனியார் கல்லூரியில் மாணவர் சேர்க்கை, கல்லூரி முதல்வர் களின் அதிகாரத்திற்குட்பட்டது என்ப தைத் திருத்தம் செய்து ஆண்டுதோறும் அரசு வெளியிடும் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டது என்பதைப் புதிய அரசாணை மூலம் வெளியிட வேண்டும்.

அரசு உதவி பெறும் கல்லூரிகளின் உதவி பெறும் பாட வகுப்புகள் உதவி பெறா பாட வகுப்புகள் மற்றும் சுயநிதி கல்லூரி பாட வகுப்புகளுக்குரிய கல்விக் கட்டணங்களை உறுதி செய்திட, கல்விக் கட்டணக் குழுவை உடனே அமைக்க வேண்டும். பொதுநீதியில் உருவாக்கப்பட்டுள்ள, அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி களின் அடிப்படை கட்டமைப்பு வசதி களை, தனியார் சுரண்டலுக்குப் பயன்படு வதைத் தடுக்கும் நோக்கில், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் உதவி பெறா பாட வகுப்புகள்  நடை பெறுவதை (கேரள அரசு தடை செய்துள்ளது போல்) தமிழ்நாட்டிலும் தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாநிலைப் போராட்டம் நடை பெற்றது. இதில் மாநிலம் முழுவதி லிருந்தும் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.