tamilnadu

img

தொழிற்சாலையை விட மனித உயிர் முக்கியம்

சென்னை, டிச. 31- வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  தொழிற்சாலை களை விட மனித உயிர்தான் முக்கியம் என்று கூறினார். சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து அமோனியா வாயு கசிவு வெளியேறியதில் பாதிக்கப் பட்ட மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஞாயிறன்று (டிச.31)  பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் கே.பால கிருஷ்ணன் கூறியதாவது:  மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட பலத்த மழை வெள்ளத்தால் எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய எண்ணெய் கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் குப்பம், நெட்டு குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள மீனவ கிராமங் களுக்குள்ளும் மழை வெள்ளத்தின் போது எண்ணெய் படலம் பரவி வீடுகளில் படிந்தது. மீன்பிடி படகுகள், வலைகள் சேதமடைந்தன. எண்ணெய் கழிவால் மீனவர்களும், திருவொற்றியூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா நகர் இருளர் காலனியை சேர்ந்த பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்த 26அன்று

 அளவுக்கதிகமாக அமோனியா வாயு கடல் வழியாக வெளிவந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நள்ளிரவு நேரத்தில் மக்கள் உயிர் பிழைக்க உடமைகளை எல்லாம் விட்டு ஓடிச் சென்று பாதுகாத்துக் கொள்ளும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். எதனால் இந்த நிலை என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில், மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி ஓடியுள்ளனர். 54 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதிலும் இன்னும் 20 பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். 2004 டிசம்பர் 26 அன்று சுனாமி ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான கடலோர மக்கள் உயிரிழந்தனர். தற்போது இந்த ஆபத்து கடலினால் ஏற்படவில்லை. மிக்ஜம் புயலால் ஏற்பட வில்லை. மாறாக கோரமண்டல் தொழிற் சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா கசிவால் ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவு கப்பலில் இருந்து இறக்குமதி செய்த நேரத்தில் நிகழ வில்லை. சாதாரணமாக பைப் லைனை  தூய்மைப்படுத்தும் போது ஏற்பட்டுள் ளது. ஒருவேளை இறக்குமதி செய்யும் நேரத்தில் ஏற்பட்டிருந்தால் மிக மோச மான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார். அரசு உடனடியாக தலையிட்டு இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்களின் உயிருக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் ஏழை, எளிய  மக்கள்,

மீனவர்கள், கூலித்தொழி லாளர்கள். இவர்களை அலட்சியப் படுத்தும் வகையில் அரசின் நட வடிக்கை இருக்கக்கூடாது.  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலைகளில் எல்லாம் முறை யாக ஆய்வு செய்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.  மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் பாது காத்திருக்க முடியும்.

அரசு அந்த தொழிற்சாலையின் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கடலோர ஒழுங்காற்று சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள  கடலோரங்களில் கார்ப்பரேட் நிறு வனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க  ஏதுவாக புதிய சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டு வருகிறது.

அதையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்ட கே.பாலகிருஷ்ணன், போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், அதேபோல் உங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதையும் நிச்சயமாக முதலமைச்சரிடம் வலி யுறுத்துவோம் என்றார்.  

கட்சியின் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வகுமாரி, ஆர்.கருணாநிதி, பகுதிச்செயலாளர் எஸ்.கதிர்வேல், பகுதிக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, கே.வெங்கடைய்யா, அலமேலு, புஷ்பா, அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.