tamilnadu

க.அன்பழகன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி...1ஆம் பக்கத் தொடர்ச்சி

முதல் 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும், புரசைவாக்கம், பூங்காநகர், அண்ணாநகர், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இறுதியில் 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில்போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார்.

1971ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டுவரை சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2 முறை கல்வித்துறை அமைச்சராகவும், ஒருமுறை நிதித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 1977ஆம் ஆண்டு முதல் தாம் இறக்கும்வரை, தொடர்ந்து 43 ஆண்டுகள் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். வாழ்கதிராவிடம், தமிழர் திருமணமும் இனமானமும்உட்பட மொத்தம் 16 நூல்களை எழுதியுள்ளார்.3 மகள்களும், 3 மகன்களும் உள்ளனர். 

தலைவர்கள் அஞ்சலி
சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், திமுகபொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு,டி.ஆர்.பாலு எம்.பி,கனிமொழி எம்.பி.,திக தலைவர் கி.வீரமணி, சிபிஐ மூத்த தலைவர்ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர்இரா.முத்தரசன், நா.பெரியசாமி, ஐயுஎம்எல்தலைவர் காதர்மொய்தீன், காங் தலைவர்கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, எச்.வசந்தகுமார் எம்பி.,கார்த்திக் சிதம்பரம்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,பேரா சுப.வீரபாண்டியன், கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சத்யராஜ், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அன்பழகன் மறைவையொட்டி திமுகநிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் எரியூட்டப்பட்டது.

;