சென்னை, ஏப். 30- பெரம்பூர் தில்லைநாயகம் பிள்ளை 2ஆவது தெருவை சேர்ந்த வர் அப்புன் ராஜ். இவரது மகன் வேம்பு விஷ்வா (18). இவர் பெரம்பூ ரில் உள்ள ஐடிஐயில் 2ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் பிரிவில் படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை தனது நண்பரின் பைக்கை வாங்கி கொண்டு பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக சென்று கொண்டி ருந்தார்.
அப்போது பெரியார் நகரிலிருந்து காயிதே மில்லத் கல்லூரி வரை செல்லும் (தடம் எண் 29) மாநகர பேருந்து எதிரே வந்தது. எதிர்பாராத தருணத்தில் பைக்கும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட தில் வேம்பு விஷ்வா தலை, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தி னர் ஓடி வந்து வேம்பு விஷ்வாவை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், வேம்பு விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். விபத்து தொடர்பாக ஓட்டுநர் சுரேஷ் (52) கைது செய்யப்பட்டார்.