கடலூர், செப்.10- ஆசிரியர்கள் உழைத்தால் தான் சமூதாயத்தின் எதிர் காலம் நன்றாக இருக்கும், அவர்களின் உழைப்பே தலைசிறந்த உழைப்பு என்று கடலூர் பள்ளியில் நடை பெற்ற ஆசிரியர் தின விழா வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார். கடலூர் முதுநகரில் இயங்கி வரும் சிஎஸ்ஐ தூய தாவீது மேல்நிலைப்பள்ளி யில் ஆசிரியர்கள் தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் எஸ்.ஐசக்நியூட் டன் வரவேற்றார். தலை வர்கள் எஸ்.பிலிப் ரிச்சர்ட், ஏ.அருன் ஜேபஸ், பள்ளியின் தாளாளர் இசட்.ஞானக் கண்செல்லப்பா, உதவி தலைமை ஆசிரியர் ஜே. ஹெலன் ஞானபாய் உள்ளிட்டோர் பேசினர். இந்த விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றிய சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட பள்ளிகளில் 303 வருடம் கடந்து இரண்டாவது பழமை யான பள்ளியாக திகழ்கிறது சிஎஸ்ஐ தூயதாவீது மேல் நிலைப் பள்ளி. இந்த பள்ளி யில் ஆயிரமாயிரம் மாண வர்கள் கல்வி அறிவு பெற்று பல்வேறு பெரிய பெரிய பொறுப்புகளுக்கு சென் றுள்ளனர். இந்த பள்ளியில் தான் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்டோர் கல்வி பயின்று உள்ளனர். இந்த பள்ளிக்கு நீண்ட நெடிய வர லாறு உள்ளது” என்றார். சமூகத்தில் ஏராளமான பணிகள் உள்ளது. எந்த ஒரு தொழிலும் கேவலமானது கிடையாது. அனைவரும் உழைத்துக் கொண்டிருப்ப தால் தான் சமூகம் இயங்கிக் கொண்டுள்ளது. உழைப்பை நிறுத்திவிட்டால் உலகம் நின்றுவிடும் என்று காரல் மார்க்ஸ் சொல்லியிருக்கி றார். உழைப்புகளிலேயே தலை சிறந்த உழைப்பு ஆசி ரியர் உழைப்பு. ஆசிரியர் உழைத்தால்தான் சமுதா யத்தின் எதிர்காலம் நன்றாக இருக்கும், எதிர்கால தலை முறையை உருவாக்க முடி யும் என்றும் அவர் தெரி வித்தார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தீண்டாமை என்றால் என்ன என்ற கேள்வி கேட்கிறார்கள். இந்த சமூ கத்தை எங்கே கொண்டு விடும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். மத்திய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த கல்விக் கொள்கை கலாச்சாரத்தையும், பண் பாட்டையும், சீர்தூக்கி பார்க்காது. கொள்கை எது கல்வியாளர்கள் மீது அறிவி யல், விஞ்ஞானம் வளர்ந்துள் ளது. இவைகளை பயன்ப டுத்தி மாணவர்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும், சிறந்த சாதனையாளர்களாக வருகிற வாய்ப்பு உங்க ளுக்கு உள்ளது என்றும் பாலகிருஷ்ணன் கூறினார்.