“வட மாநிலத்தில் இருந்து மதப்புயல் ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதை உள்ளே விட்டுடாதிங்க என்று கூறுகிறார்கள். அதை நாம் விடமாட்டோம். அது வடமாநிலத்தை பொறுத்தவரை தான் மதப்புயல். தமிழ்நாட்டில் அது மடப்புயல் தான். இங்கு மதத்தை வைத்து அரசியல் செய்யவே முடியாது. இங்கே இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அனைத்து மதத்தை சார்ந்தவர்களும், அனைத்து சாதியை சார்ந்தவர்களும் ஒற்றுமையாக இருக்கின்றோம். இந்த ஒற்றுமை சீர்குலைந்து போகக் கூடாது” என்று திரைக்கலைஞர் சத்யராஜ் பேசியுள்ளார்.