உளுந்தூர்பேட்டை, ஜூன் 11- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கிராம மக்கள் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் மனு அளித்தனர். திருநாவலூர் ஊராட்சியில் தூய்மை பாரதம் திட்டத்தில் நடைபெற்றுவரும் தனி நபர் கழிவறை கட்டும் திட்டத்தில் 811 கழி வறைகள் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப் பட்டது. இதில் பல வீடுகளில் கழிவறை கட்டும் பணிகள் முடிக்கப்படாமலேயே பணிகள் முடிக்கப்பட்டதாக கூறி, முறைகேடாக அதற்கான பில் தொகையை எடுத்துள்ளனர். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கட்டி முடிக்கப்படாத கழிவறை களை கட்டித்தர வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் இதுபோன்ற நிலை நீடிப்பதாகவும், கட்டுமானப் பணிகளை கண்காணிக்க வேண்டிய உயர் அதிகாரி கள் ஏழை மக்களுக்கான திட்டங்களில் நூதன முறையில் முறைகேடு செய்வதாகவும், இதில் உள்ளூர் ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.