tamilnadu

img

ஐ.ஒ.சி எல் நிறுவனம் பிராணிகளுக்கான சிறப்பு அவசர ஊர்தி அன்பளிப்பு

இந்தியன் ஆயில் நிறுவனம் பிராணிகளுக்கான சிறப்பு அவசர ஊர்தியை இந்திய புளு கிராஸ் அமைப்புக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இதனை சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவு நிர்வாக இயக்குநர் ஆர்.சித்தார்த்தன் புளு கிராஸ் அமைப்பின் இணை நிறுவனர் டாக்டர் எஸ்.சின்னி கிருஷ்ணாவிடம் வழங்கினார். நிறுவனத்தின் தமிழ்நாடு புதுச்சேரி நிர்வாக இயக்குநர் பி.ஜெயதேவன், மனித வளபிரிவின் தலைமை பொதுமேலாளர் கே.பாஸ்கர், பொதுமேலாளர் எஸ்.சீத்தாராமன் மற்றும் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் இதில்  கலந்து கொண்டனர்.