கவிஞர் யுகபாரதி எழுதிய பின்பாட்டு நூல் அறிமுகக்கூட்டம் வெள்ளியன்று (நவ.29) சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் நூலை அறிமுகம் செய்து பேசினார். மொழிபெயர்ப்பாளர் மயிலைபாலு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இயக்குநர் ராஜூமுருகன், எழுத்தாளர் பாக்கியம் சங்கர், கவிஞர் வெயில், குழந்தை செயற்பாட்டாளர் க.மலர்விழி,மாவட்டத் தலைவர் சி.எம்.குமார், செயலாளர் வெ.இரவீந்திரபாரதி, இயக்குநர் பகத்சிங் கண்ணன், எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் பேசினர்.