tamilnadu

img

பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியால் அதிமுக -பாஜக இடையே மோதல்

சென்னை,ஜன.5 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது அதிமுக-பாஜக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழகத்தின் அடுத்த பாஜக  தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த கருத்து க்கேட்பு கூட்டம் ஞாயிறன்று  நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. விரைவில் புதிய தலைவரை கட்சி அறிவிக்கும்.  என்றார். உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமல் எங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்' என்றும் அவர் கூறினார். இந்த  பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், பொன்.ராதா கிருஷ்ணன் பேசியது கூட்டணி தர்மத்துக்கு அழகல்ல என்றார்.

;