tamilnadu

காந்திகிராம பல்கலை.,யில் கணிதத்திற்கான சர்வதேச மாநாடு

சின்னாளப்பட்டி, ஜன.23- காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட பயன்பாட்டுப் பகுப்பாய்வு மற்றும் தனிநிலைக் கணிதத்திற்கான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா திங்களன்று நடை பெற்றது.

இந்த மாநாடு ஜனவரி 22  முதல் 24-ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. விழாவில், துறைத் தலைவர் ஆர்.உதயகுமார் வரவேற்றார். ஐசிஏ ஏடிஎம் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார், இந்திய தொழில் நுட்பக் கழகம் பொன்னுச்சாமி, காந்தி கிராமம், பதிவாளர் எல்.ராதா கிருஷ்னன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஐசிஏஏடிஎம் துணை ஒருங்கிணைப்பாளர் பி.பாலசுப்ர மணியன் நன்றி கூறினார். ஜெர்மனி ஆலென் பல்கலை., பேரா., மஹ்யார் மஹின்சஎய்ம், மலே சியா யுசிஎஸ்ஐ பல்கலை., குருநாதன் ரத்னவேலு, பொலிடெக்னீக் மெட்ரோ கோலாலம்பூர் கோகிலா மியுண்டி, பெங்களூரு ஐஐஎஸ்சி நந்த குமரன், கணிதவியல் துறை வெங்கடேஷ், புதுதில்லி பல்கலை., அவதேஷ் பிரசாத், தெலுங்கானா இந்திய தொழில்நுட்ப கழக கணிதவியல் துறை ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.