போதைப்பொருக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனத்தின் தலைவர் பொறியாளர் பெ.குமார்,செயலாளர் பெ.மலர், இயக்குநர் பேராசிரியர் சுதாகரன், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். சூளகிரி அரசு மருத்துவமனை மருத்துவர் பூபதி விழிப்புணர்வு உறுதிமொழியை வாசித்தார். மாணவர்கள் முகமது அப்பாஸ் பிரபாகரன் சண்முகம் ஒருங்கிணைத்தனர்.