tamilnadu

img

டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் தீவிர விழிப்புணர்வு

சென்னை,அக்.29- தமிழகத்தில் கடந்த பத்து மாதங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள தாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் 10  வாரங்கள் நடைபெற உள்ள  10,000 மழைக்கால சிறப்பு முகாம்களைத் சென்னை யில் ஞாயிறன்று (அக்.29)  தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்  பேசிய அவர், “தமிழகம் முழுவதி லும் தொடர்ந்து இரண்டு, மூன்று மாதங்களாகவே டெங்கு பாதிப்புகள் கட்டுப் படுத்துவது தொடர்பான நட வடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. ஒவ் வொரு ஆண்டும் வட கிழக்கு பருவ மழையின் போதும், தென்மேற்கு பருவ மழையின்போதும் மழைக் கால நோய்களான டெங்கு,  மலேரியா, சிக்குன்குனியா, டையரியா போன்ற நோய்கள் பரவல் என்பது கூடுதலாகி வரும். எனவே இந்த ஆண்டை பொறுத்த வரை வடகிழக்கு பருவ மழை மட்டுமல்லாமல் கோடைக்கால மழை, வெப்ப ச்சலன மழை என்று தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

எனவே தமிழகம் முழு வதிலும் மக்கள் நல்வாழ் வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கி ணைந்து தொடர்ந்து விழிப் புணர்வை ஏற்படுத்து வதிலும், டெங்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதி லும் தேவையான நடவடிக் கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத்துறையைப் பொறுத்தவரை அனைத்து மாவட்ட தலைமை மருத்து வமனைகளிலும், மருத்து வக்கல்லூரி மருத்துவமனை களிலும், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு என்று தனி வார்டு உருவாக்கப்பட்டு அந்தந்த மருத்துவமனை களின் இடவசதிக்கு ஏற்ப படு க்கைகள் அமைத்து தனி சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்புகள் என்பது ஒரு 10,000-த்துக்கும் கீழே என்று தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் தமிழகத் தில் ஜனவரி முதல் தற்போது வரை ஏற்பட்டிருக்கும் டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 5,896. இதில் இன்று வரை மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 607, கடந்த பத்து மாதங்களில் ஏற்பட் டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை, சனிக்கிழமை தஞ்சையில் ஏற்பட்டுள்ள இறப்புகளையும் சேர்த்து 7 என்கின்ற எண்ணிக்கையில் இருக்கின்றன. எனவே தொடர்ச்சியாக டெங்கு பாதி ப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றார்.

பேட்டியின் போது மாநக ராட்சி மேயர் ஆர். பிரியா, ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.