சென்னை, செப். 18 - கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் விளையாட்டு மையம் அல்லது ஏழை மக்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தினார். சென்னை கிண்டியில் 161 ஏக்கர் பரப்பில் கிண்டி ரேஸ் கிளப் அமைந்துள்ளது. கிளப் நிர்வாகம் அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் குத்தகை தொகை மற்றும் அபராதம் செலுத்த வேண்டிய உள்ளது. அதை செலுத்த மறுத்ததால் மாவட்ட ஆட்சியர் குத்தகை உரிமத்தை ரத்து செய்தார். செப்.9ந் தேதி கிளப் நுழைவு வாயில்களுக்கு சீல் வைத்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. போராட்டமும் - கைதும் இந்த நிலையில், ரேஸ் கிளப் நிலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், கிளப் நிலத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மையம் அல்லது ஏழை மக்களுக்கான குடி யிருப்புகளை அமைக்க வேண்டும், கிளப் நிர்வாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய சுமார் 800 கோடி ரூபாயை வட்டியுடன் வசூலிக்க வேண்டும். கோயம்பேடு பேருந்து நிலையத்தை, கலை அறிவியல் கல்லூரியை கொண்ட கல்வி வளாகமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி புதனன்று (செப்.18) கிண்டி ரேஸ் கிளப் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ஜி.ராம கிருஷ்ணன் கூறியதாவது: 1945ஆம் ஆண்டு 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை அண்ணாமலை செட்டியாருக்கு அன்றைய அரசு குத்தகைக்கு கொடுத்தது. ஆண்டுக்கு ரூ.614 குத்தகைத் தொகையாக நிர்ணயித்தது. 1974ஆம் ஆண்டு மாநில அரசு வாடகையை சற்று உயர்த்தியது. உயர்த்திய வாடகை மற்றும் வாடகை பாக்கி என 730 கோடி ரூபாயை கிளப் நிர்வாகம் அரசுக்கு தராமல் உள்ளது. அதன் காரணமாக மாநில அரசு கிளப்பிற்கு சீல் வைத்தது. கிளப் நிர்வாகத்தின் முறையீட்டை தொடர்ந்து சீல் நடவடிக்கையை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. சென்னை மாநகரம் விரிவடைந்து,
ஆவடி மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி உருவாகி உள்ளது. செங்கல்பட்டு வரை சென்னை வளர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். மக்க ளுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை செய்ய அரசுக்கு நிலம் தேவைப்படுகிறது. மறியல் குதிரை பந்தயத்தை தமிழ்நாடு அரசு 70களில் துவக்கத்தில் தடை செய்தது. அதன் நினைவாக அண்ணா மேம்பாலம் அருகே அதற்கான நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில், சென்னை மாநகர குடிசைவாசிகளை செம்மஞ்சேரி, கண்ணகி நகருக்கு அனுப்புவதற்கு மாறாக, 160 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கலாம் அல்லது விளையாட்டு மையம் அமைக்கலாம். கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் மாநில கல்லூரி, நந்தனம் கல்லூரி என இரண்டு கலைக் கல்லூரிகள் தான் உள்ளது. எனவே, கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்த இடத்தில் கல்வி வளாகம் அமைக்கலாம். இதனை உடனடியாக அரசு செய்யாவிடில், மார்க்சிஸ்ட் கட்சி மறியல் உள்ளிட்ட போராட்டங் களை நடத்தும் இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ராமகிருஷ்ணன், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசுடமையாக்கியது போன்று கிளப்பையும் மீட்க முடியும். அரசுக்கு தேவைப் படும் போது ஏழைகளின் நிலத்தை கையகப் படுத்தும் அரசால், இந்த நிலத்தை கையகப் படுத்த முடியாதா? என்றார். கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் ந.வெங்கடேசன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி, ஜி.விஜய லட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.