சென்னை, டிச. 20 - குறைந்தபட்சமாக ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வலியுறுத்தி புத னன்று (டிச.20) மாநிலம் முழுவதும் இபிஎஸ்- 95 ஓய்வூதியர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இபிஎஸ் ஓய்வூதியர்களுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்று பாஜக வாக்குறுதி கொடுத்தது. அதை ஒன்றிய பாஜக அரசு நிறை வேற்றவில்லை. அரசு நியமித்த பல் வேறு குழுக்கள், நாடாளுமன்ற நிலைக்குழு, ஓய்வூதிய நிதியை பரா மரிக்கும் அறக்கட்டளை, தொழிலா ளர் துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஓய்வூதியத்தையும் வழங்க மறுக்கிறது.
இபிஎஸ் திட்டத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு இருந்தும், ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 50 எம்.பி.க்கள் பேசிய பிறகு ஒன்றிய அரசு அமைதியாக உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஓய்வூதி யம் அகவிலைப்படி யுடன் சேர்த்து ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், இ.பி.எஸ். திட்டத்தில் உள்ள பிரிவு களின் அடிப்படையில், முழு சம்ப ளத்திற்கு ஓய்வூதியம் வழங்க வேண் டும். 2014-ல் உருவாக்கப்பட்ட ஓய்வூதியத்தை குறைக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இபிஎஸ் ஓய்வூ தியர் சங்கங்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை கிண்டி ரயில் நிலையத் தில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.கனகராஜ் தலைமை தாங்கினார். துணை ஒருங்கி ணைப்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
கோவை, சேலம், வேலூர், தரும புரி, இராமநாதபுரம், புதுச்சேரி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்க ளில் இந்த போராட்டம் நடைபெற்றது.