tamilnadu

img

பேட்டரி கரை கூடுதல் நேரம் இயக்க வலியுறுத்தல்

திருவண்ணாமலை, ஆக. 5- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரி கார் இயக்கப்படு கிறது. மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகளை பேட்டரி கார் மூலம் பேருந்து நிறுத்தத்தி லிருந்து, பல்வேறு துறை அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லும் வகையில் பேட்டரி கார் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இயக்கப்படுகிறது.  மாற்றுத்திறனாளிகள் குறைதீர்வு தினமான திங்கட்கிழமை யன்று காலை 10 மணிக்கு இந்த பேட்டரி கார் சேவை துவங்கு கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள் முன்னதாக காலை 8 மணி முதலே, அலுவலகத்திற்கு வரத் துவங்குகின்றனர். இதனால் முன்னதாக வரும் மாற்றுத்திறனாளிகள் பேருந்து  நிறுத்தத்திலிருந்து, துறை அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாற்றுத்திறனாளி கள் குறைதீர்வு நாட்களில், கூடுதல் நேரம் பேட்டரி கார் இயக்க  வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரியுள்ளனர்.