சென்னை, ஜூலை 2- சென்னையில் தற்போது நிலவும் சூழலில் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களிடம் புகார் பெற்று விசாரிக்கப் போவதாக பெருநகர சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளர். பெருநகர சென்னை காவல் துறையின் 107வது காவல் ஆணையராக மகேஷ்குமார் வியாழனன்று (ஜூலை 2) பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கான ஆணையராக சேவையாற்றுவேன் அதே போல், 20 ஆயிரம் காவல் துறையினர் நலனில் அக்கறை செலுத்து வேன். தனிமனித விலகல், முக கவசம் அணி வதை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். காவல்துறையினர் பொதுமக்களிடம் கவன மாக பணியாற்ற வேண்டும். ஊரடங்கு நாட்களில் பொதுமக்கள் வெளி வர முடியாத நிலையில், இனி வாரத்தில் இருமுறை பொதுமக்களிடம் காணொலி காட்சி மூலம் புகாரைப் பெற்று தாமே விசாரிக்கப் போவதாகவும் தெரி வித்தார்.
சைபர் குற்றங்களை தடுக்க நிலையான வழிகாட்டு முறையை வகுக்க உள்ளோம். இத்த கைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவர் நேரடி தொடர்பில்லாததால், விழிப்புணர்வு மூலம்தான் தடுக்க முடியும். ஆர்பிஐ மற்றும் காவல் துறைக்கு 24 மணி நேரத்திற்குள் புகார் அளித்தால் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் இழப்பது தவிர்க்க லாம் எனவும் அவர் தெரிவித்தார். சென்னை கூடுதல் ஆணையராக பணி புரிந்த போதே சிசிடிவி போன்ற தொழில் நுட்பங்கள் அமல்படுத்தப்பட்டன. அது இன்னும் மேம்படுத்தப்படும் என தெரிவித்த அவர், செல்போன், செயின் பறிப்பு குற்றங்களை தடுக்க சில புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றங்களை தவிர்க்க, எங்கு குற்றங்கள் அதிகம் நடைபெறுகிறது என கவனித்து அதை குறைக்க கவனம் செலுத்தப்படும். காவலர்கள் மனஅழுத்தம் போக்க சில ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.