சென்னை, அக்.12- ரயில் விபத்துக் கள் அன்றாட நிகழ்வு களாக மாறி விட்ட தாகவும், இதற்கு ஒன்றிய பாஜக அர சின் நிர்வாகத் திற மையின்மையே காரணம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வெளி யிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப் பிட்டிருப்பதாவது:
சென்னை அருகே கவரைப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படு காயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள அனைவருக்கும் உயர் சிகிச்சை உறுதி செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்து கிறோம்.
வெள்ளிக்கிழமை, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு வழியாக பீகாருக்குச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மாற்றுத் தடத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள் ளது. இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. உயிரிழப்பு ஏதும் இல்லை என்பது ஆறு தல் அளிப்பதாக உள்ளது.
ரயில் தடம் புரண்ட சத்தம் கேட்டவுடன் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏரா ளமான பொதுமக்கள், தன்னார்வலர்கள் திரண்டு ரயில்வே மற்றும் காவல்துறை யுடன் இணைந்து இடிபாடுகளுக்கு இடை யில் சிக்கியுள்ளவர்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தி னரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் தொடரும் ரயில் விபத்து களின் தொடர்ச்சியாக தற்போது தென்னக ரயில்வே எல்லைக்குள் நடைபெற்றுள்ள இந்த விபத்து, நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் காட்டுகிறது. ஓரளவு பாதுகாப் பாக உணரப்பட்ட தென்னக ரயில்வே கட்ட மைப்பிலும் விபத்துக்கள் அதிகரிப்பதை, எச்சரிக்கையாக உணர்த்துகிறது. பண்டி கைக் காலத்தில் நடைபெற்றுள்ள இந்த விபத்தால் ஏராளமான பொதுமக்கள் தங்க ளுடைய பயணத் திட்டம் பாதிக்கப்பட்டு சிர மத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து என்ற விதத்தில் ரயில்வே துறை இருப்பது மிக மிக ஆபத்தானதாகும். ஒன்றிய பாஜக அர சின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சி யப் போக்குமே இதுபோன்ற விபத்துக்க ளுக்கு முக்கியக் காரணம் என்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுவது டன் தனது வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
ஒன்றிய பாஜக அரசு விழிப்புடன் செயல் பட்டு இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளை தவிர்ப்பதற்கும், ரயில் பய ணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், ரயில்வே துறையை மேம்படுத்திடவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.