tamilnadu

ஊழல் துணைவேந்தருக்கு பதவி நீட்டிப்பா?

சென்னை, ஜூன் 29- ஊழல் - முறைகேடு குற்றச்சாட் டுக்காக கைது நடவடிக்கைக்கு உள்ளான சேலம் பெரியார் பல்க லைக்கழக துணைவேந்தர் ஜெக நாதனுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு  வழங்கியுள்ள ஆளுநர் ஆர்.என்.  ரவிக்கு, இந்திய மாணவர் சங்கம்  கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பதவி நீட்டிப்பைத் திரும்  பப் பெற வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அக மது, மாநிலச் செயலாளர் கோ.  அரவிந்தசாமி ஆகியோர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: பெரியார் பல்கலைக்கழகத் தில் பணி நியமனம், கணினி உபகர ணங்கள் கொள்முதல், இணைய தள தளவாடங்கள் கொள்முதல், இணையதள சேவை கட்டமைப்பு கள் உருவாக்குதல், பட்டியலின மாணவர்களின் திறன் மேம்பாட் டுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு கோடி  ரூபாயில் முறைகேடு, அமேசான் இணைய முறைகேடு, வளாக பரா மரிப்பில் முறைகேடு என எழுந்த புகார்களை விசாரிக்க பழனிச்சாமி ஐஏஎஸ் தலைமையில் இரு நபர் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு ஓராண்டு விரிவான  விசாரணை நடத்தி கடந்த 05.02. 2024 அன்று தமது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில், துணைவேந்தர் ஜெகநாதன் மீது 6 குற்றச்சாட்டுகளும், பதி வாளர் தங்கவேல் மீது எட்டு குற்றச்  சாட்டுகளும், தமிழ்த் துறைத் தலை வர் பெரியசாமி மீது ஐந்து குற்றச் சாட்டுகளும் உறுதியாகியுள்ளன. இந்நிலையில் கணினி அறிவி யல் பேராசிரியரும் பதிவாளரு மான தங்கவேல் மீது 8 குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ள தால் அவரை, உடனடியாக பணி யிடை நீக்கம் செய்ய வேண்டும் என  அரசின் உயர்கல்வித் துறை முதன்  மைச் செயலர் துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் துணைவேந்தரோ, அரசின் ஆணை யை செயல்படுத்த மறுத்து வரு கிறார்

. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். மறுபுறத்தில், தமிழ்நாடு அரசு  அமைத்த குழுவால் பல கோடி  ரூபாய் அளவில் ஊழல் நடை பெற்றுள்ளது கண்டறியப்பட்டுள்ள பிறகும், துணைவேந்தர் ஜெகநாத னும், பதிவாளர் தங்கவேலுவும் பணியில் நீடிப்பது பொருத்தமற் றது. எனவே, துணைவேந்தரும், பதிவாளரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் கள் மீது ஊழல் குற்ற வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந் திய மாணவர் சங்கம்  பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

இந்நிலையில், துணைவேந்தர்  ஜெகநாதனின் பதவிக் காலம் முடிந்துவிட்ட நிலையில், ஊழல்  குற்றச்சாட்டுக்கு உள்ளான அவ ரையே மீண்டும் துணைவேந்தராக பணி நீட்டிப்பு செய்து, ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனை வன் மையாகக் கண்டிக்கின்றோம். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவுக்கு ஆதரவாக செயல்  படும் நபர் குற்றவாளியாகவே இருந்தாலும் அவருக்கு பணிக் கால  நீட்டிப்பு வழங்குவது ஆளுநரின் இந்துத்துவா அரசியலை முன்னி றுத்துவதாக உள்ளது.  எனவே, குற்றவாளியாக கரு தப்படும் ஜெகநாதனுக்கு மீண்டும் துணைவேந்தர் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்திருப்பதைத் திரும்  பப் பெற வேண்டும் என இந்திய  மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக் குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்  பிடப்பட்டுள்ளது.