tamilnadu

img

‘டிஜிட்டல் யுகம் பொதுமக்களை அதிகாரப்படுத்தவில்லை’

சென்னை, ஏப்.9- உலகிலேயே இந்தியாவில்தான் இணைய சேவை அதிகளவில் முடக்கப்படு கின்றன என்றும் இணையதளத்தில் 70 ஆயிரம்  செய்திகளை அகற்றியுள்ளனர் என்றும்  அதிர்ச்சி தகவலை தெரிவித்த மூத்த பத்திரிகை யாளர் ஏ.எஸ்.பன்னீர்செல் வன், டிஜிட்டல்  யுகம் பொதுமக்களை அதிகாரப்படுத்த வில்லை என்று விமர்சித்தார்.  சென்னையில் தமிழ் ஊடகப்பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சமூக ஊட கங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து பத்திரி கையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் உரை யாற்றினார்.

அவர் பேசியதாவது: உலகிலேயே அதிகள வில் இணைய சேவை இந்தியாவில்தான் முடக்  கப்படுகிறது. உள்துறையா, தகவல் தொழில் நுட்பத்துறையா என யார் இந்த முடிவை எடுத்  தார்கள்? எதனால் எழுத்துக்கள் நீக்கப்பட்டன? என்ற எந்த விவரமும் நமக்குத் தெரியாது. தக வல் நமக்கு கிடைப்பதில் பாரபட்சம் நிலவு கிறது. டிஜிட்டல் யுகம் பொதுமக்களை அதிகா ரப்படுத்தவில்லை. நான் 1983 இல் இந்த துறைக்கு வந்த காலங்களில், அச்சு ஊடகங்க ளுக்கு 70 சத வருமானம் விளம்பரம் மூலமாக  கிடைத்தது. அப்போது அச்சு ஊடகங்கள் லாபம் தருபவையாக இருந்தன. நாளிதழ் களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்  டும் (deadline) என்ற நேரவரையறை இருந் தது. எனவே பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த வுடன் பேசப்பட்டவை குறித்த தகவல்களை  விவாதிக்கவும், சரிபார்க்கவும் நேரம் இருந்  தது. ஆனால் இணைய இதழ்களுக்கு நேர  எல்லை (deadline) தொடர்ச்சியாக இருப்ப தால், தகவல்கள் சரிபார்க்கப்படாமல் கொடுக்  கப்படுகின்றன. அச்சு ஊடகங்களில் செய்தி சேகரிக்கச் செல்லும் போது புகைப்படக்காரர், நிருபர் என இருவர் செல்வர். தமக்குள் அவர்  கள் பேசிக்கொள்வர். ஆனால் இணைய இதழ்  களில் பலவேலை (multi tasking) என்று  சொல்லி, அதுதான் திறமை என நம்ப வைக்  கப்பட்டு பணியாட்கள் குறைக்கப்படுகின்ற னர். இக்காலங்களில் பத்திரிகை ஆசிரியர் என்பவர் மேலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

அச்சு ஊடகங்களில் நாற்பது சதவீத செலவு செய்திக்காக செலவிடப்பட்டு வந்தது. நெல் சன் மண்டேலா பதவியேற்ற போது இந்து நாளிதழ் ஒரு சிறப்புச் செய்தியாளரை தென் னாப்பிரிக்காவிற்கு அனுப்பியது. அப்போது தி இந்து நாளிதழில் வெளிநாடுகளில் செய்தி  சேகரிக்க 22 செய்தியாளர்கள் இருந்தனர். ஆனால் இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர். 1998-க்குப் பிறகு தொழிலாளர் துறை தொடர்பான போராட்டங்கள்,சிக்கல் குறித்து செய்தி சேகரித்து எழுத ஒரு பத்திரி கையாளர் இல்லை. எனக்குப் பிறகு தி இந்து வில் ரீடர்ஸ் எடிட்டர் ( Reader’s editor) பணி யிடம் நிரப்பப்படவில்லை. இந்திய விவசாயி கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து தொடர்ந்து  எழுதி வந்த சாய்நாத்திற்கு பிறகு கிராமப்புற விவகாரங்களைப் பற்றி எழுதும் ஆசிரியர் (Rural affairs editor) பணியிடம் காலியாக உள்ளது. எல்லா அச்சு ஊடகங்களிலும் இது தான் நிலைமை.

செய்திக்காக செலவழிப்பது வெகுவாக குறைவு

தற்போது விளையாட்டுத்துறைக்கு என  செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் ஊடகங்க ளில் இல்லை. அதற்கு மாற்றாக விளையாட்டு  வீரர்களை வைத்து பேச வைக்கின்றனர். அவர்  கிரிக்கெட் வாரியத்தில் ( BCCI) தணிக்கை குழு வில் இருப்பார் அல்லது மைதானக் குழுவில்  (Pitch Committee) உறுப்பினராக இருப்பார்.  இப்படிப்பட்ட நபர்களுக்கு முரண்பட்ட நலன்  கள் (conflict of interest) இருக்கும். எனவே சரி வர செய்தி வராது. வெளிநாட்டு பிரச்சனை என்றால், மேனாள் தூதர்களை அழைத்துப் பேச வைக்கின்றனர். பொருளாதாரம் என்றால்  மேனாள் வங்கித் தலைவர்களை பேச வைக்  கின்றனர். ஏனென்றால் பொருளாதாரம் குறித்த  செய்தியாளர் இல்லை. வெளிப்படுத்தும் உரிமை (Right to expression), கேட்கும் உரிமை (Right to listen) இல்லை. இந்தக் காலத்தில் செய்திக்கு செலவழிப்பது வெகு வாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில்  நுட்பங்களுக்கு செலவழிப்பது அதிக ரிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மூலம் வரும் வருமானத்தில் 85 சத வீதமானது கூகுள், முகநூல், டிவிட்டர் போன்ற  சிலிகான் கம்பெனிகளே எடுத்துக் கொள்கின் றன. மீதமிருக்கும் 15 சதம்தான் 180 மொழி களில் இருக்கும் இணைய இதழ்கள் வருமான மாகப் பெறுகின்றன.

காஷ்மீர் மாநிலத்தில் 370 பிரிவு நீக்கப்பட்ட போது நான்கு மாதங்களாக இணையசேவை முடக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள் நடை பெறும் போதெல்லாம் சத்தீஸ்கர், ஜார்கண்ட்  மாநிலங்களில் இணைய சேவை நிறுத்தப்பட்  டன. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத் தின் போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மாவட்டங்களில் இணைய சேவை துண் டிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துண்டிக்  கப்பட்டது. மாவட்ட வாரியாக இணைய சேவை யை துண்டிக்க முடிகிறது. உலகிலேயே அதிக அளவு இணைய சேவையை துண்டித்த நாடு இந்தியாதான். நான் என்னுடைய வலைதளத்தில் எழுதி யிருப்பதை, அரசு நினைத்தால் மற்றவர்களை  படிக்க முடியாமல் தடுக்க முடியும். இது  எனக்கு பயமாக இருக்கிறது. அப்படியானால் தனி நபர் கருத்துரிமை என்ன ஆவது? அனல் மின்சாரம், நீர் மின்சாரம், காற்று  மின்சாரம் என அனைத்தையும் மின்கம்பியா னது பாகுபாடின்றி கடத்தும். ஆனால், டிஜிட் டல் யுகத்தில் இணையதள வசதி அனைவருக்  கும் பாகுபாடின்றி கிடைப்பதில்லை. உதார ணமாக, டிஜிட்டல் பரிவர்த்தனையை வசதி யானவர்கள் ஆதரிக்கிறார்கள். கூகுளில் தேடி னால், அதனை ஆதரிப்பவர்களின் கருத்து தான் முதலில் வரும். அதை எதிர்க்கும் ஜெய ரஞ்சன், ரித்திகா கேரா போன்றோரின் கருத்து  ஆறாவது அல்லது ஏழாவது பக்கத்தில் வரும். அதுவரை நமக்கு பொறுமையும், நேரமும் இருக்காது.

அச்சு ஊடகத்தில்  லாபம் கிடைப்பதில்லை

அச்சு ஊடகத்தில் நாம் தேடிப் படிக்க முடி யும். நமது கருத்துப் பத்திரிகை (உதாரண மாக முரசொலி, தீக்கதிர்) என தேர்ந்தெடுத்து படிக்க முடியும். அதனால்தான் காந்தி தனி யாக பத்திரிகை ஆரம்பித்தார். இருபதாம் நூற்றாண்டில் அரசியல் கட்சிகள் தங்களுக் கான பத்திரிகைகளை நடத்தின. அச்சு ஊடகத்தில் இப்போது லாபம் கிடைப்பதில்லை. அதை முதலாளிகள் விரும்ப வும் இல்லை. ஏனெனில், மற்றவர்கள் அதில்  வராமல் பயப்பட வைக்கிறார்கள்! கார்ப்பரேட்  முதலாளிகள் அச்சு ஊடகங்களை நட்டப்  படுத்துங்கள் என்கிறார்கள். அது ரிலை யன்ஸ், ஜியோ போன்ற நிறுவனங்களுக்கு அம்பானி, அதானி போன்றவர்களுக்கு நல்லது. களத்திற்குச் சென்று நிலைமைகளை சொல்லுவதற்குப் பதிலாக, ஸ்டுடியோவில் அமர்ந்து விவாதிப்பது என வந்து விட்டது. புல்வாமா தாக்குதலில் என்ன நடந்தது என்ற  விவரங்கள் தெரிவதற்கு முன்பாகவே அது சரியா, தவறா என்ற விவாதங்களில் நாம் இறங்கி விட்டோம். அப்படியானால் நாம் மக்களை எப்படி தெளிவுபடுத்த முடியும்.

பொதுமக்கள் தொலைபேசிக்கு, இணைய சேவைக்கு, பணம் செலுத்த தயாராக உள்ளனர். ஆனால் நாளிதழுக்கு செலவழிக்க தயாராக இல்லை. 1994 இல் பிசினஸ் லைன் செய்தித்தாளின் விலை நான்கு ரூபாய். இப்போது ஆறு ரூபாய். பணவீக்கத்தின்படி பார்த்தால் கூட ரூ.30 இருக்க வேண்டும். நாளி தழ்களின் விளம்பர வருமானம் குறைந்து விட்டது. தி வயர், மின்னம்பலம் போன்ற இணைய இதழ்களுக்கு கூட நிலையான வருமானம் இல்லை. போபால் விஷ வாயு சம்பவம் நடந்த போது  500க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் ஒரே செய்தி யை போட்டபோது, ரவிராய் என்ற பத்திரிகை யாளர் பாதிக்கப்பட்ட போபாலின் அசோக் நக ருக்குச் சென்று புகைப்படம் எடுத்த குழந்தை முகம் தான் இந்தியா டுடே அட்டைப் படமாக வந்தது. சண்டே அப்சர்வர் இதழில் ஆசிரி யராக இருந்த வினோத் மேத்தா பம்பாய் ,பிலா வண்டியில் கலவரத்தின் போது, வழக்கமாக காவல்துறைக்குச் (police beat) செல்லும் பத்திரிகையாளரை அனுப்ப வேண்டாம். அவர்கள் காவல்துறை சொல்வதையே செய்தியாகத் தருவார்கள். தொடர்பில்லாத நபரை அனுப்புங்கள் என்றார். இப்படி செய்தி யை தேடிச் சேகரிப்பது இப்போது குறைந்து விட்டது.

விவாத நேரத்தில் பதில் சொல்ல நேரம் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள். ஒருமுறை மார்க்சிஸ்ட் கட்சி மாநாடு முடிந்தவுடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் சொல்ல இஎம்எஸ். நம்பூதரிபாட் நான்கு நிமி டம் எடுத்துக் கொண்டார். காஷ்மீரில் இணைய சேவையை நிறுத்தி யதை எதிர்த்து அனுராதா பாஷின் தொடர்ந்த வழக்கில் உங்கள் வாதம் நியாயமானது என்று  உச்சநீதிமன்றம் கூறியது. ஆனால், நிவாரணம்  வழங்க முடியாது. 370 பிரிவை நீக்கியதை எதிர்த்து காஷ்மீரின் நான்கு முன்னாள் முதல்  வர்கள் தொடுத்த வழக்கு விசாரணைக்கே இன்னமும் எடுத்துக் கொள்ளப்பட வில்லை.  அப்படியானால், இணையக் கட்டுப்பாடுகளை  எப்படி சாதாரண மனிதன் எதிர் கொள்ள முடியும்.  இவ்வாறு அவர் கூறினார். “நான்கு நாளிதழ்கள், இரண்டு வார இதழ்கள், ஒருசில சிறு பத்திரிகைகளே 1990 வரை ஊடகங்களை கட்டுப்படுத்திய நிலை யில் இணைய உலகம் ஜனநாயக வெளியை குரலற்றவர்களுக்கு காட்டியுள்ளது. இந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதுதான் நமக்கு முன் உள்ள சவால்” என்று தலைமையுரையாற்றிய சுக தேவ் குறிப்பிட்டார்.