tamilnadu

img

9 மாவட்டங்களில் அதிகரிக்கும் வெப்பம் 

சென்னை:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பநிலை இயல்பைக் காட்டிலும் அதிகரிக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மதுரை, திருச்சி, பெரம்பலூர்  மாவட்டங்களிலும், புதுச்சேரியில் வெப்பநிலை இயல் பைக் காட்டிலும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக  வானிலை மையம் கூறியுள்ளது.தென்மேற்கு பருவக் காற்று காரணமாகவும் வெப்பச்சலனம் காரண மாகவும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

;