tamilnadu

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: விழிப்புடன் இருக்க சுகாதார செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை:
பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகுதான் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்ப தால் பொது மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது சற்று ஆறுதல் தருகிறது” என்றார்.கொரோனா பாதிப்பு குறைகிறது என பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. ஏனென் றால், பல மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகு தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமானது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங் களை காத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

அதேபோல் பண்டிகை நாட்களில் பொருட் களை வாங்க வெளியே செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். இது போன்ற நேரங்களில் பொருட்கள் வாங்க பொது மக்கள் அதிகம் வெளியே வருவார்கள் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என வணிகர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.