tamilnadu

img

புதுமைப்பெண் திட்டத்தால் உயர்கல்வி கற்கும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையி லான திமுக அரசு செயல்படுத்தி வரும்  விடியல் பயணம், கலைஞர் மகளிர்  உரிமைத்தொகை,  புதுமைப் பெண்,  முதலீட்டாளர்கள் முதல் முகவரி,  மீனவர்கள், விவசாயிகள் நலன்  முதலான  மக்கள் நலன் காக்கும்   முத்தான திட்டங்களால் இந்தியா விலேயே  தமிழ்நாடு முதன்மை மாநில மாக மிளிர்கிறது!

மு.க.ஸ்டாலின்  2021-ஆம்  ஆண்டில் பொறுப்பேற்ற நாள் முதல் புதிய புதிய திட்டங்களை  நிறைவேற்றி  வருகிறார்.  குறிப்பாக, பெண்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உட்பட   தமிழகத்தில் வாழும்  அனைத்துப் பிரிவினரும்  நல்வாழ்வு பெற முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி  வரும் திட்டங்கள் அண்டை மாநிலங்களையும், அயல்நாடு களையும்  ஈர்த்து வருகின்றன.

 விடியல் பேருந்து திட்டம்

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வுடன் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட 5 திட்டங்களில் ஒன்று விடியல் பயணத்திட்டம். பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர்கள் ஆகியோருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தில் நாளது வரையில் ரூ. 6661.47 கோடி செலவில் மகளிரும் மாற்றுத் திறனாளிகளும் திருநங்கைகளும் ஏறத்தாழ 473.61 கோடி முறை பயண நடைகளும், திருநங்கைகள் 28.62 லட்சம் பயண நடைகளும், மாற்றுத்திறனாளிகள் 3.78 கோடி பயண நடைகளும் மேற்கொண்டு மாதம் ஒன்றுக்கு ரூ. 888 வரை  சேமிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள னர்.   

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத்  தொகைத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டம்   15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டமாகும்.  இத்திட்டத் தில் இதுவரை  1 கோடியே 15  லட்சம்  மகளிர்க்கு மாதந்தோறும்  ரூ1,000   உரிமைத் தொகையாக வழங்கப்படு கிறது.  இந்த மகளிர் உரிமைத்  தொகை  இதுவரை கிடைக்காதவர் களுக்கும் வழங்கிட அரசு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது.

புதுமைப் பெண் திட்டம்  

காஞ்சி மாநகரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான   கடந்த 2022ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி  தொடங்கிவைத்த ஒரு புரட்சிகரமான திட்டம் புதுமைப் பெண் திட்டமாகும்.  இது. 6-ஆம் வகுப்பு  முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவியர், தடையின்றி உயர் கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாட்டில் உள்ள மாநில, ஒன்றிய அரசு சார்ந்த, பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில், இளநிலைப் பிரிவில் மருத்துவம், துணை மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் பாடங்கள் பயிலவும், பட்டயப் படிப்புகள் மற்றும்  தொழில் துறைப் பயிற்சி நிறுவனங்க ளில் பயிலவும், உதவித் தொகையாக,  மாதந்தோறும் ரூ.1,000 ஒவ்வொரு மாணவிக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. நேரடி பயன் பரிமாற்ற முறைப்படி, இந்த உதவித்தொகை, 2.73 லட்சம் மாணவியரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றது. 

இத்திட்டத்தின் காரணமாகப் பள்ளிப்படிப்பை முடித்துக் கல்லூரி களில் சேரும் மாணவர்கள் எண் ணிக்கை தேசிய அளவில் 26 சதவிகிதம்  என குறைந்திருக்க, தமிழ்நாட்டில் மட்டும் 52 விழுக்காடு என உயர்ந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப் பட்டுள்ளது.  இத்திட்டங்களால் குடும் பங்களின் பொருளாதாரச் சுமை அகற்றப்பட்டு, மாணவச் செல்வங்கள் தடையின்றி கல்வி கற்றிடும் இனிய சூழ்நிலைகள் வளர்ந்துள்ளன.  இது திமுக  அரசின் கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்துள்ள வெற்றியாகும். இதேபோல மாதம்  ரூ.1,000 வழங்கும் ஊக்கத்தொகை  வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட உள்ளது. 

முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 

தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கிவைத்த ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத் தின்படி, கிராமங்கள் வளமடை கின்றன.  கிராமப்புர மக்கள்  பயனடை கின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் 

கடந்தாண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கப்பட்ட, “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்”

பட்டியல் இன மற்றும் பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான திட்டமாகும். 

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கடந்த நிதியாண்டில் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2.136 பயனாளிகளுக்கு  வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன.  1,303 தொழில் முனைவோருக்கு அரசு மானியமாக மட்டும்  ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் 33.09 கோடி ரூபாயை  மானியமாகப் பெற்ற னர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆதிதிராவிட இளைஞர்கள் மகளிர்  முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு புரட்சித் திட்டமாகும்.

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் 

தமிழ்நாடு முதலமைச்சர் 18.11.2021 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு  விழாவில் தொடங் கிவைத்த “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48” திட்டம்  சாலை விபத்தினால் ஏற்படும் உயிர்  இழப்புகளைக் குறைத்திடும் வகை யிலும், அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளை குறைப்பதற்கும் உதவுகிறது.  

நான் முதல்வன் திட்டம் 

முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான நான் முதல்வன் திட்டம்  1.3.2022 அன்று முதலமைச்சர் பிறந்த நாளில் தொடங்கப்பட்ட  திட்டமாகும்.  நான் முதல்வன் திட்டத் தின் மூலம்  உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி  மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப் பெறுகின்றன திறன் பயிற்சி கள் வழங்கப்படுகின்றன.  கல்லூரி யில் படித்துப் பட்டம் பெற்றும் வேலைக் கேற்ற திறன் இல்லாதவர்களாகக் காணப்படும்  இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கி வேலை வாய்ப்புகளைப் பெற வழிவகுக்கும் திட்டமாகும் இது. 2026-க்குள் 20  லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கி வழிகாட்டுவதை  இலக் காக இந்த் திட்டம் கொண்டுள்ளது.

பணிபுரியும் மகளிருக்கு “தோழி விடுதிகள்”

19 மாவட்டங்களில் பணிபுரி யும் மகளிருக்கான தோழி விடுதி கள்  செயல்பட்டு வருகின்றன. முதற் கட்டமாக, திருச்சி, கூடுவாஞ்சேரி மற்றும் தாம்பரம் ஆகிய மூன்று இடங்களில் 688 பணிபுரியும் மகளிர் பயன் பெறும் வகையில் ரூ31.07  கோடி செலவில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் தமிழ்நாடு கட்டப்பட்டு இவ்விடுதிகளில் 259 பணிபுரியும் மகளிர் பயனடைந்து வருகின்றனர். 

இரண்டாம் கட்டமாக ஓசூர், திருவண்ணாமலை மற்றும் பரங்கிமலை ஆகிய 3 இடங்களில் 432 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.35.87 கோடி செலவில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் கட்டப்படுகின்றன.

சேலம், தஞ்சாவூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, அடையாறு (சென்னை) ஆகிய 7 இடங்களில் 476 படுக்கை வசதிகள் கொண்ட விடுதிகள் ரூ.4.21 கோடியில் புதுப்பிக்கப்பட்டு 13.7.2023 முதல் செயல்பட்டு வருகிறது.     

திருமண நிதியுதவித் திட்டத்தில் சாதனை

மகளிர் திருமண நிதியுதவி திட்டங்களின்கீழ், 3 ஆண்டுகளில் 1  லட்சத்து 26 ஆயிரத்து 637  மகளிருக்கு ரூ.1,047 கோடி திருமண  நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 68 ஆயிரத்து 927 மகளிர்க்கு 8 கிராம் தங்க நாணயங்களுடன் நிதியுதவிகளும்; 57 ஆயிரத்து 710  மகளிர்க்கு நிதியுதவிகளும் வழங்கப் பட்டு மகத்தான சாதனை படைக்கப் பட்டுள்ளது.  

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை

திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு  புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20-09-2023-ல் முதலமைச்ச ரால் வெளியிடப்பட்டது.  2021-ம்  ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு  செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங் களின் எண்ணிக்கை 2,032.  இன்றைய  நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல்  அதிகரித்து 8,416-ஆக உயர்ந்துள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று  மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த  அரசின் செயல் பாட்டிற்குக் கிடைத்த  வெற்றியாகும்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டி யலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

இப்படி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல்  மகளிர், மாணவர்கள், தொழிலா ளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு மாநிலஅரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களால்  இந்தியாவில்  தமிழ்நாடு  முதல் மாநிலமாக  முன்னேற்றம்  கண்டுள்ளதை பத்திரிகையாளர் களும் நடுநிலையாளர்களும் பாராட்டி வருகின்றனர். 

(தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புதுறை)