சென்னை, ஜூன் 1- மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாடு முழுவதும் விவ சாய தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்திற்கு தமிழ்நாட்டில் விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்மு கம் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:- நாடு முழுவதும் விவசாய தொழிலாளர்கள் ஜூன் 4 ஆம் தேதி போராட்ட நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கின் காரண மாக வேலை வாய்ப்பை இழந்து விவசாய தொழிலாளர் குடும்பங் கள் வறுமையின் பிடியில் சிக்கி பெருந்துயரத்திற்கு ஆளாகி யுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து அவர் களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யாமல் அவர்களை நிர்கதி யாக தவிக்க விட்டுள்ளது வன்மை யான கண்டனத்திற்குரியது. எனவே, ஒவ்வொரு குடும்பத்திற் கும் ரூ.7500 கொரோனா கால நிவா ரண உதவியாக வழங்க வேண் டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்குவதுடன் கூலியை 600 ரூபாயாக உயர்த்த வேண்டும். மின்சார திருத்தச்சட்டம் 2020ஐ திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெறவுள்ளது. விவசாய தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழுமையான ஆதரவை தெரி வித்துக் கொள்வதுடன் விவசாயி கள் இப்போராட்டத்தில் பங் கேற்று வெற்றியடையச் செய்ய வேண்டும். இவ்வாறு சண்முகம் தெரி வித்துள்ளார்.